புதுச்சேரி, 28- அம்பேத்கரை அவ மதித்த ஒன்றிய உள்துறை அமித்ஷா பதவி விலக வேண்டும் இடது சாரி கட்சிகள் வலியுறுத்தி யுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி, ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) ஆகிய கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் முதலியார் பேட்டையில் நடைபெற்றது. சிபிஐ மாநில துணைச் செயலாளர் கே. சேது செல்வம் தலைமை தாங்கி னார். சிபிஎம் புதுச்சேரி மாநிலச் செயலாளர் எஸ்.ராமச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஆர். ராஜாங்கம், வெ.பெரு மாள், சிபிஐ நிர்வாகிகள் விசுவநாதன், நாரா.கலை நாதன், கீதா நாதன், தினேஷ் பொன்னையா, அந்தோணி, சிபிஐ-எம்எல் நிர்வாகிகள் பால சுப்பிரமணியம், புரு ஷோத்தமன், விஜயா, அருள் ஆகியோர் கலந்து கொண்டனர். நாட்டின் விடுதலைப் போராட்டத்திலும், சமூக விடுதலைப் போராட்டத்தி லும் தீவிரமாக ஈடுபட்ட சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் பெயரை உச்சரிப்பதால் எந்த பயனும் இல்லை என்று நாடாளுமன்ற மாநி லங்களவையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது சனாதன வன்மத்தை வெளிப்படுத்தி யுள்ளார். அண்ணல் அம்பேத்கரை இழிவு படுத்திய அமித்ஷா வின் ஆவணப் பேச்சுக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், அமித்ஷா பதவி விலக கோரி ஜனவரி 7 ஆம் தேதி சுதேசி பஞ்சாலை அருகில் இடதுசாரி கட்சிகள் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.