கிருஷ்ணகிரி, ஜன.29 – ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி டிப்பர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை துவக்கியுள்ளனர். ஓசூர் பகுதியில் இயங்கி வரும் கல் குவாரிகளில் ஜல்லி,எம் சேண்டு விலையை கடந்த 1 ஆம் தேதி முதல் டன்னுக்கு ரூ. 100 முதல் 200 வரை உயர்த்தியுள்ளனர் உரிமையாளர்கள். இந்த விலை ஏற்றம் டிப்பர் லாரி உரிமையாளர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சுமார் 5 ஆயிரம் கட்டுமான தொழி லாளா்கள் வேலை இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், டிப்பர் லாரி உரி மையாளர்கள் ஜன.28 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை துவக்கியுள்ளனர். இதனால், மேலும் அதிகமாக கட்டுமான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து டிப்பர் லாரிகளையும் ஓரிடத்தில் நிறுத்தி வைக்க இடம் ஒதுக்கி தருமாறு டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஓசூா் சாராட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட சாராட்சியா் பிரியங்கா, இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவ னத்திற்கு கொண்டு சென்று உரிய நட வடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரி வித்துள்ளார்.