districts

img

போதைப் பொருளை எதிர்த்து எடப்பாடி போராட வேண்டிய இடம் குஜராத் தான்!

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அதிரடி

சென்னை, மார்ச் 15 - சென்னை தேனாம்பேட்டை யிலுள்ள அண்ணா அறிவால யத்தில், திமுக அமைப்புச் செய லாளர் ஆர்.எஸ். பாரதி வியா ழனன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: “ஜாபர் சாதிக்கிற்கும் திமுக வுக்கும் தொடர்பு இருப்பது போல எடப்பாடி பழனிசாமி பேசு கிறார். அதிமுக ஆட்சியில் 2013-இல் ஜாபர் சாதிக் மீது தொடரப்பட்ட வழக்கில் 2017-இல் எடப்பாடி முதல்வராக இருந்தபோது தான் ஜாபர் சாதிக் விடுதலை செய்யப் பட்டார். அதற்கு காரணம் எடப் பாடி பழனிசாமி நியமித்த அரசு வழக்கறிஞர் சீனிவாசன்தான். அவர் வழக்கை திசைத் திருப்பி, ஒழுங்காக நடத்தாமல் போனதால் ஜாபர் சாதிக் விடு தலையானார். அதன் காரண மாக, அந்த வழக்கறிஞர் பார் கவுன்சிலில் இருந்து நீக்கப் பட்டார். ஜாபர் சாதிக்கிற்காக ஆஜரானவர் இன்று பாஜக-வில் முக்கிய பொறுப்பில் இருக் கும் பால் கனகராஜ். ஆட்சி மீது மக்கள் வைத் துள்ள நல்ல நம்பிக்கையினா லும், கருத்துக்கணிப்பு திமுக விற்கு ஆதரவாக வருவதாலும் திட்டமிட்டு மக்கள் கவனத்தை திசை திருப்ப எடப்பாடி முயற் சிக்கிறார். பாஜக ஆளும் குஜ ராத்தில் உள்ள அதானியின் துறைமுகத்தில் இருந்துதான் இந்தியாவிற்குள் போதைப் பொருள் வருகிறது. எனவே, எடப்பாடி பழனிசாமி குஜராத் தில்தான்  மனிதச் சங்கிலி நடத்தி இருக்க வேண்டும். என்ஐஏ போன்ற பெரிய அமைப்புகளை வைத்திருக்கும் ஒன்றிய அரசாங்கத்தையே ஏமாற்றியதை போல, ஜாபர் சாதிக் திமுகவையும் ஏமாற்றி யுள்ளார். உளவுத்துறை, ஒன்றிய அரசையே ஏமாற்றும் ஒருவன், ஆப்ட்ரால் எங்களை ஏமாற்ற முடியாதா? திமுகவில் அணி பொறுப்பாளர்களை முதல்வரோ, உதயநிதியோ தேர்வு செய்து நியமிப்பதில்லை. மாவட்டச் செயலாளர்கள் பரிந் துரைப்படிதான் நியமனம் செய்யப்படுகின்றனர். அது ஒன்றும் பெரிய பதவி இல்லை, துணை அமைப்பாளர் பதவி தான். அது பத்தோடு பதினொன்று. எடப்பாடியுடன் புகைப் படம் எடுத்துக் கொண்ட நபர் ஒருவர், மடாதிபதியை மிரட்டி பணம் கேட்டுள்ளார், எடப்பாடி அனுப்பிக் கேட்டார் என நான் கூற முடியுமா? புகைப்படம் இருப்பதால் அவருக்கும், திமுகவிற்கும் தொடர்பு இருப்ப தாக கூறுவது தவறு. அரசிய லில் சிலர் புகைப்படத்தில் தங்கள் படம் வர வேண்டும் என்பதால் தலைவர்கள் அருகே வந்து நிற்பார்கள். 12 ஆண்டுகள் தண்டனை பெற்ற ஒரு போதைப்பொருள் கடத்தல்காரரை அமித்ஷா பாஜகவில் இணைத்துக் கொண்டுள்ளார். இஸ்லாமிய கர்ப்பிணியை பாலியல் வன்பு ணர்வு செய்து, அவரது 3 வயது மகளை கொன்ற நபர் சிறை யில் இருந்து வெளிவந்தவுடன் பாஜக தலைவர்கள் மாலை யிட்டு வரவேற்பு அளித்தனர். இதையெல்லாம் மறந்து விட்டு,  எங்களை பழனிசாமி விமர் சிப்பது பாஜகவின் அடிமையா கத்தான் எடப்பாடி இன்னும் இருக்கிறார் என்று தெரிகிறது.  இவ்வாறு ஆர்.எஸ். பாரதி பேட்டியில் கூறியுள்ளார்.