சென்னையில் “தாய்லாந்து வாரம்” எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் மே 5 முதல் 7 வரை நடைபெறுகிறது சென்னை, மே 5- சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் “தாய்லாந்து வாரம் மே 5 அன்று தொடங்கியது. தாய்லாந்து சர்வதேச வர்த்தக மேம்பாட்டுத் துறை, வர்த்தக அமைச்சகம், தாய்லாந்து அரசு, சென்னையில் உள்ள தாய் வர்த்தக மையம் ஆகியவற்றின் சார்பில் நடைபெறும் இந்த நிகழ்வு மே 6, 7 ஆகிய தேதிகளிலும் நடைபெறவுள்ளது. தாய்லாந்து வாரத்தை சென்னையில் உள்ள ராயல் தாய் துணைத் தூதரகத்தின் கான்சல் ஜெனரல் நித்திரூஜ் போன்பிரசெர்ட் தொடங்கி வைத்தார். உடல்நலம், அழகு சாதனப் பொருட்கள், உணவு மற்றும் பானங்கள், வீட்டு அலங்கார பொருட்கள், வீடுகளுக்கு தேவையான பொருட்கள், ஃபேஷன் மற்றும் ஃபேஷன் தொடர்பான பொருட்கள், ஆரோக்கியம் மற்றும் ஸ்பா க்கு தேவையான பொருட்கள் என வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பொருட்களும் தயாரிப்புகளும் தாய்லாந்து வர்த்தக மையத்தால் தாய்லாந்தில் இருந்து நேரடியாக இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தாய்லாந்து உணவுகளை சமைக்கும் நேரடி செயல்விளக்கத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.