ஓசூர் சட்டமன்ற தொகுதியில் யானை தாக்கியதில் மம்தா என்ற பெண் மரணம் அடைந்த தகவல் அறிந்ததும் அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் மருத்துவமனைக்கு சென்று உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பிறகு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ. 10 லட்சம் நிவாரண தொகை வழங்க உத்தரவிட்டுள்ள தகவலை தெரிவித்தார். மேலும், ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார். மாநகர துணை மேயர் ஆனந்தய்யா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.