உலகின் முதன்மையான விளையாட்டுத் தொடரான ஒலிம்பிக் தொடரின் 33ஆவது சீசன் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது.
இந்தியாவிற்கு 2ஆவது பதக்கம் மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் ஜோடிக்கு வெண்கலம்
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் 117 வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றுள்ள நிலையில், 3 நாட்களுக்கு முன்னர் மகளிர் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் (22) வெண்கலப்பதக்கம் வென்றார். பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு இது முதல் பதக்கம் என்ற நிலையில், 4ஆவது நாளான செவ்வாயன்று இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டை யர் துப்பாக்கி சுடுதலின் வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் இந்தியா வின் மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் ஜோடி, தென் கொரியாவின் லீ - ஜின் ஜோடியை எதிர்கொண்டது. தொடக் கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் ஜோடி 16-10 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப்பதக்கம் வென்றது. இதன்மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது. துப்பாக்கிச் சுடுதல் அணி பிரிவில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.
வரலாறு படைத்த விவசாயி மகன் சரப்ஜோத் சிங்
பாரீஸ் ஒலிம்பிக்கில் மனு பாக்கருடன் இணைந்து வெண்கலம் வென்ற சரப்ஜோத் சிங் (22) ஹரியானா மாநிலத்தின் அம்பாலா பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். சரப்ஜோத் சிங்கின் தந்தை ஜதீந்தர் சிங், தாயார் ஹர்தீப் கவுர் ஆகிய இருவரும் விவசாயம் செய்து வருகின்றனர். மிகவும் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த சரப்ஜோத் சிங் சண்டிகரில் உள்ள டிஏவி கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து, அபிஷேக் ராணா என்பவரிடம் முறையாக துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி பெற்று தற்போது ஒலிம்பிக்கில் பதக்க நாயகனாக உருவெடுத்துள்ளார்.
ஒலிம்பிக் நீச்சல் தொடரும் இந்தியாவின் சோகம்
ஒலிம்பிக் விளையாட்டில் மிக முக்கியமான பிரிவு நீச்சல் ஆகும். இந்த பிரிவில் பதக்கம் வெல்வது பெருமைக்குரிய விஷயம் என்ற நிலையில், நீச்சல் பிரிவில் பதக் கம் வெல்வதற்கு தனி கிளைமேக்ஸ் பேச்சு வழக்கும் நிலுவையில்உள்ளது. அதுயாதெனில் ஒலிம்பிக் நீச்சலில் பதக்கம் வென்ற நாடு அதிக கடற் பரப்பை கொண்ட அல்லது அதிக கால்வாய் கொண்ட பகுதியாக இருப்ப தால் அவர்கள் பதக்கம்வெல்கிறார்கள் என பதக்கம் வெல்லாதநாடுகள் கூறுவதுண்டு. இந்தகூற்று சமாளிக்கும் வாதம் என்றாலும், உண்மையில் நீர்நிலைகள் அதிகம் கொண்ட நாடு கள்தான் ஒலிம்பிக் நீச்சலில் வரலாறு படைத்துவருகின்றன. அமெரிக்கா, ஆஸ் திரேலியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, இத்தாலி, பிரான்ஸ், பிரேசில் போன்ற அதிக கடற்பரப்பை கொண்ட நாடுகள் ஓலிம்பிக் நீச்சலில் இன்று வரை தொடர்ச்சியாக சாதித்து வருகிறார்கள். மேற்குறிப்பிட்ட 8 நாடுகளை போல உலகின் மிகப்பெரிய நீர் நிலைகளை கொண்ட நாடாக உள்ள இந்தியா மட்டும் ஒலிம்பிக் நீச்சலில் சோபிக்காமல் “வந் தோம் போனோம்” என்றே உள்ளது. இந்தியாவில் வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்திய பெருங்கடல் என 3 பெரிய கடல்கள் உள்ளன. தாமிரபரணி முதல் கங்கை வரை 50க்கும் மேற் பட்ட மிகப்பெரிய ஆறுகள், நதிகளும், குட்டிக் கடல் போன்ற குளங்களும், கண்மாய்களும் உள்ளன. இத்தகைய பிரம்மாண்ட நீர் நிலை வசதிகள் இருந்தாலும் இந்தியர்கள் ஒலிம்பிக் நீச்சலில் சாதிக்காமல் இருப்பது சோகத்தை ஏற்படுத்துகிறது. தற்போது நடைபெற்று வரும் பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இந்திய வீரர் - வீராங்கனைகள் தொடக்க சுற்றி லேயே (ஹீட்) வெளியேறியுள்ளனர். எப்பொழுது தான் இந்த நிலை மாறும் என தெரியவில்லை.
பாரீஸ் சென்றது இந்திய தடகள அணி
பொதுவாக ஒலிம்பிக் தொடரில் தடகளம் கடைசி நிகழ்வாக இருக்கும் நிலையில், உலக நாடுகள் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் நாட்டிற்கு தங்களது தடகள அணியை தாமதமாகவே அனுப்பும். அதன்படி இந்திய ஒலிம்பிக் சங்கம் செவ்வாயன்று அதிகாலை தனது தடகள அணியை பாரீஸ் நகருக்கு அனுப்பி வைத்தது. இந்திய தடகள அணியினர் செவ்வாயன்று பிற்பகல் பாரீஸ் நகரை சென்றடைந்தனர்.