காஞ்சிபுரம், அக்.19- குருவிமலையில் அளவீடு செய்யப்பட்ட 133 வீடுகளுக்கு பட்டாவை தாமதப்படுத்தாமல் உடனடியாக வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் வட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. 11ஆவது வட்ட மாநாடு குருவிமலையில் சனிக்கிழமை நடை பெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.ஸ்ரீதர் மாநாட்டை துவக்கி வைத்தார். வட்டச் செய லாளர் எஸ்.பழனி வேலை அறிக்கையை சமர்ப்பிக்க, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சௌந்தரி, மாவட்டக்குழு உறுப்பினர் வி.சிவப்பிரகாசம் ஆகி யோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.நேரு மாநாட்டை நிறைவு செய்து பேசி னார். முன்னதாக மாவட்டக் குழு உறுப்பினர் ஜி. வசந்தா செங்கொடியை ஏற்றி வைக்க, வட்டக்குழு உறுப்பி னர் வி.வேலு வரவேற்றார். எஸ்.லோகநாதன் நன்றி கூறினார். தீர்மானம் காஞ்சிபுரம், வாலாஜா பாத் உட்பட்ட குருவிமலை கிராமங்களில் அரசு புறம்போக்கில் குடி யிருக்கும் அனைவருக்கும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் காஞ்சிபுரம், வாலாஜாபாத் தாலுக்கா வில் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும்.இத்திட்டத்தை 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும், ஊதியத்தை ரூ.600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. புதிய வட்டக்குழு மாநாட்டில் 7 பேர் கொண்ட காஞ்சிபுரம் வட்டக்குழு செயலாளராக எஸ்.பழனி தேர்வு செய்யப்பட்டார்.