districts

img

கைத்தறி நெசவாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குக

ராணிப்பேட்டை, அக்.8 – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், கலவை வட்டார 2வது மாநாடு ஆர். தனசேகரன், எஸ். சரோஜா, இ. ராஜா தலைமையில் வாழைப்பந்தல் தோழர். ஆரியப்பன் நினைவரங்கில் நடைபெற்றது.   மூத்த தோழர் எஸ். அண்ணாமலை கொடியேற்றி வைத்தார். பி.தேவன் வரவேற்றார். மாநிலக் குழு உறுப்பினர் எம். ராமகிருஷ்ணன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். வட்டார செயலாளர் எஸ். கிட்டு வேலை அறிக்கையையும், கே. சேகர் வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி. ரகுபதி, டி. சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டச் செயலாளர் என். காசிநாதன் நிறை உரையாற்றினார். தீர்மானம் கைத்தறி நெசவாளர்களுக்கு அடையாள அட்டை மற்றும் கைத்தறி உபகரணங்கள் வழங்க வேண்டும். கலவை அரசு மருத்துவமனை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். பழங்குடி மக்களுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும். கலவை தாலுகாவில் 20 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வட்டக் குழு தேர்வு 9 பேர் கொண்ட கலவை வட்டார குழு செயலாளராக எஸ். கிட்டு தேர்வு செய்யப்பட்டார்.