சென்னை, ஆக. 26-
திருவேற்காடு நகராட் சிக்கு உட்பட்ட காடுவெட்டி பகுதியில் கூவம் ஆறு செல் கிறது. சனிக்கிழமையன்று (ஆக. 26) காலை கூவம் ஆற்றில் அதிக அளவில் மீன்கள் செத்து மிதப்பதை கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவேற்காடு நக ராட்சி துப்புரவு அலுவலர் ஆல்பர்ட் அருள் ராஜ் மற்றும் அதிகாரிகள் தலை மையில் ஊழியர்கள் அப்பகுதியில் மிதந்த மீன்களை அப்புறப்படுத்தி னர்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், வெயிலின் தாக்கம் மற்றும் நீருக்கு அடியில் ஆக்சிஜன் அளவு குறைந்தால் மீன்கள் இறந்திருக்கலாம். நச்சு கலந்த நீர் கலந்திருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், இறந்து போன மீன்களை எடுத்து சென்று ஆய்வுக்கு அனுப்பி உள்ளதாகவும், ஆய்வு முடிவு வந்த பின்புதான் மீன் கள் இறந்ததற்கான கார ணம் தெரியவரும் என்றார்.
மேலும் ஏதேனும் தனி யார் நிறுவனங்களில் இருந்து ரசாயனம் கலந்த கழிவு நீர் கூவத்தில் கலக் கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்த னர்.