districts

img

வீரளூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் ஊழல் முறைகேடு குறித்து விசாரணை

திருவண்ணாமலை, ஜூலை 12- திருவண்ணாமலை மாவட்டம், கலச பாக்கம் தாலுகாவில் உள்ள வீரளூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் பல்வேறு முறை கேடுகள் நடந்துள்ளதாகவும், இந்த முறை கேடுகள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்  வலி யுறுத்தியுள்ளது. இதுகுறித்து செவ்வாயன்று (ஜூலை 9) மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. கூட்டுறவு சங்க செயலாளர் மனோகரன் மீது, போளூர் கூட்டுறவு சங்க அலுவலகத்தில்  நேரடி விசாரணை நடைபெற்றது. விசாரணையில் கூட்டுறவுத்துறை மாவட்ட அலுவலர்கள், பாதிக்கப்பட்ட விவசாயிகள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.கே வெங்கடேசன், மாவட்ட செயலாளர் அ உதயகுமார், பகுதி செயலாளர் எல். சிவக்குமார், பகுதித் தலைவர் வே. ஏகாம்பரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.