சென்னை, நவ.19- தெற்காசியாவிலேயே முதல் முறையாக மிக அதிவேக திறன் கொண்ட இமேஜிங் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய ‘பிடி எப்ஏசிஎஸ் டிஸ்கவர் எஸ்8 செல் வரிசைப்படுத்தல்’ கருவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜோத்பூர் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் பிடி இந்தியா நிறுவனத்தின் பிடி உயிரி அறிவியல் நிறுவனம் இதனை நிறுவியுள்ளது. இந்த கருவியானது உயிரணுக்களின் எண்ணிக்கை, அளவு மற்றும் நியூக்ளிக் அமில ஆகியவற்றை வரிசைப்படுத்தும் இமேஜிங் பகுப்பாய்வு வசதியைக் கொண்டுள்ளது. மரபணு சிகிச்சை, புற்றுநோய் நோய்த்தடுப்பு, ஸ்டெம் செல் ஆராய்ச்சி உள்ளிட்ட உயிரியல் ஆராய்ச்சியின் பல்வேறு பகுதிகளுக்கான பயன்பாடுகள் இக்கருவியில் இருப்பதால், நாட்டில் ஆராய்ச்சி நடைமுறைகளை மறுவடிவமைக்கும் ஆற்றலைக் இக்கருவி கொண்டுள்ளதாக பிடி இந்தியா நிர்வாக இயக்குனர் அதுல் குரோவர் கூறினார்.