சென்னை, பிப்.3 நாட்டில் ஆன்லைன் கார் விற்பனையை மேலும் துரிதமாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு போக்ஸ்வே கன் பைனான்ஸ் –நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனமான குவை செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஆன்லைன் வாயிலாக கார் வாங்க விரும்புவோர் கடன் பெறவும் இதில் வசதி உண்டு. இந்த செயலி பிளாக் செயின் தொழில்நுட்பத்தோடு செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் ஒரு செயல்தளமாகும். கார் வாங்குபவர், விற்பனையாளர், நிதியுதவி வழங்குவோர் என அனை வரையும் ஒருங்கிணைப்பதன் வழியாக கார் விற்பனை பரிவர்த்தனையை இது மேற்கொள்கிறது. கார் விற்பனையை வெளிப்படைத்தன்மையோடு மேற்கொள்ள வும் விற்பனையாளர், வாங்குவோர் மற்றும் நிதியுதவி வழங்குவோர் சரியான முடிவை மேற்கொள்ளவும் இந்த தொழில்நுட்பம் உதவும் என்று குவை நிறுவனத்தின் இணை நிறுவனர் கணேஷ் குமார் கூறியுள்ளார்.