சிதம்பரம், ஜன. 31- அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் பொருளாதார துறை சார்பில் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவதில் உழவர், உற்பத்தியாளர், நிறுவனங்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் சர்வதேச பயிலரங்கம் நடைபெற்றது. வேளாண் பொருளாதார துறை தலைவர் ராமநாதன் தலைமை தாங்கினார். இதில் வேளாண் புல முதல்வர் சுந்தரவரதராஜன் கலந்துகொண்டு பேசுகையில், உழவர், உற்பத்தியாளர் நிறுவனங்கள் நமது நாட்டில் வெற்றி பெற இது போன்ற சர்வதேச அளவிலான பயிலரங்குகள் தேவை” என்றார். இந்த பயிலரங்கில், அமெரிக்காவின் பன்னாட்டு உணவு ஆராய்ச்சி நிறுவனத்தின் செயல் திறன் ஊக்குவிப்பு திட்டத் தலைவர் சந்திரபாபு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக முன்னாள் விரிவாக்கக் கல்வி இயக்குநர் வடிவேல், காரைக்கால் ஜவகர்லால் நேரு வேளாண் புல முதல்வர் புஷ்பராஜ், மதுரை வேளாண் வணிக வளர்ச்சி அமைப்பின் தலைமை செயல் அதிகாரி சிவக்குமார், தஞ்சாகூரில் உள்ள வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேளாண் பொருளாதாரத் துறை தலைவர் nஜகன்மோகன் ஆகியோரும் பேசினர். இந்த பயிலரங்கத்தில் உலகின் பல நாடுகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட வேளாண் ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டனர்.