districts

img

இரசாயன பொறியியல் தொழில்நுட்பம்: விஐடியில் சர்வதேச கருத்தரங்கம்

வேலூர், டிச.15 - வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் ரசாயன பொறியியல் துறை சார்பில் டெக் னோஸ் கேப்-23 நீர் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்புக்கான நிலையான தொழில்நுட்பங்கள் குறித்து சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. விஐடி வேந்தர் கோ.விசு வநாதன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கு சிறப்பு மலரை வெளியிட்டு உரையாற்றிய வேந்தர் கோ.விசுவநாதன், “இந்தியாவில் 8 விழுக்காடு அளவுக்கு மட்டுமே மழை நீர் சேமிக்கப்படுகிறது. மற்றவை வீணாக கடலுக்கு தான் செல்கிறது. மழை நீரை சேமிக்க நமது முன்னோர்கள் உருவாக்கிய அணைகள், ஏரி, குளம், குட்டைகளை பாதுகாத்து முறையாக பராமரிக்க வேண்டும்” என்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஒன்றிய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் இணை செய லாளர் தனலட்சுமி, “நீர்மேலாண்மை என்பது மிகவும் அவசியம். சென்னையில் கடந்த வாரம் மிக்ஜம் புயல் மழை காரணமாக 4 நாட்கள் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். புயல் மழையை பார்த்து நாம் நீர் மேலாண்மையை கற்றுக்கொள்ள வேண்டும்”என்றார்.  கே.எச்.எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அப்துல்வகாப் மற்றும் துணைவேந்தர் (பொறுப்பு) காஞ்சனா பாஸ்கரன், இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி, துறைத் தலைவர் முருகானந்தம், ஆகியோர் பங்கேற்றனர்.