செங்கல்பட்டு, செப்.8- பன்னாட்டு சிறுகதைக் களஞ்சியம் நூல் வெளியீட்டு விழா செங்கல்பட்டு மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கம் மற்றும் மலேசியா ஈப்போ முத்தமிழ் மன்றம், செங்கல்பட்டு மாவட்ட நூல் (வாசகர்) படிப்போர் வட்டம் ஆகிய அமைப்புகள் இணைந்து பன்னாட்டு சிறுகதைக் களஞ்சியம் நூல் வெளியீட்டு நிகழ்வு மலேசியா ஈப்போ முத்தமிழ் மன்றத்தின் சார்பாக கலை இலக்கியம் படைப்பாளிகளுக்கு விருது வழங்கும் விழா வில் செங்கல்பட்டு மாவட்ட மைய நூல கத்தில் நிர்வாகி இளைய கட்டப்பொம்மன் தலைமையில் நடைபெற்றது. தமுஎகச செங்கல்பட்டு கிளை நிர்வாகி சா.கா. பாரதிராஜா வரவேற்றார். ராஜலட்சுமி வேதாசலம் அரசு கலை அறிவி யல் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் முனைவர் சு.மாதவன் பன்னாட்டு சிறுகதைக் களஞ்சியம் நூல் வெளியீட்டு வாழ்த்துரை வழங்கினார். மலேசியா ஈப்போ முத்தமிழ் மன்றத்தின் தலைவர், டாக்டர். அருள் ஆறுமுகம் கண்ணன் நூலிற்கு ஏற்புரையும் வழங்கினார். தமுஎகச மாநில துணை செயலாளர் ஏகாதசி நூலை பெற்றுக்கொண்டு நிறை உரை யாற்றினார். இறுதியாக கலை இலக்கியம் படைப் பாளிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் தமுஎகச செங்கல்பட்டு கிளை தலைவர். பி.வி.ராமமூர்த்தி, கிளைச் செய லாளர். மு.முனி செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.