districts

உள்புகார் குழு: வழக்கறிஞர் அஜிதா ராஜினாமா

சென்னை,ஏப்,4- கடந்த நான்கு ஆண்டுகளாக கலாஷேத்ரா அறக்கட்டளையின் உள்புகார் குழுவின் வெளிப்புற உறுப்பினராக இருந்து  வந்த வழக்கறிஞர் அஜிதா, அந்த உறுப்பி னர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  இதுகுறித்து   அவர் விடுத்துள்ள அறிக்கை யில். ``கடந்த நான்கு ஆண்டுகளில், நான் வெளிப்புற உறுப்பினராக இருந்தபோது எங்களிடம் 3- 4 புகார்கள் வந்துள்ளன. அப்போது நாங்கள் அவற்றை விசாரித்து, தீர்வும் கொடுத்தோம். புகார்களுக்கு ஏற்றாற்போல் பணி இடைநீக்கம் செய்திருக்கிறோம்.  இந்த உள்புகார் குழுவின் பணியைப் பொறுத்தவரை, பாலியல் புகார்களை விசாரித்து அதற்கு எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கலாம் என்று நிர்வாகத்திடம் எடுத்துக்கூறலாம். ஆனால்  முடிவு எடுப்பது நிர்வாகம்தான். இந்த உள்புகார் குழு `பெண்கள் மீதான பாலி யல் பிரச்னைகள் குறித்த புகார்களை’ மட்டும் தான் விசாரிக்குமே தவிர, மற்ற புகார்களை நாங்கள் கேட்க முடியாது. ஏனென்றால் சட்டத்தின் வரம்பு அவ்வளவு தான். இதைத்தான் பாலினம் சார்ந்த சட்டம் (Gender specific act) என்கிறோம். அதனால்தான் நிர்வாகத்திடம், ``நீங்கள்  உடனே நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட  மாணவர்களுக்கு சரியான தீர்வு வழங்குங்கள்” என்றோம். மது அருந்திவிட்டு  வருவது, கெட்ட வார்த்தை பேசுவது போன்ற  விஷயங்களில் ஈடுபடுபவர்கள் மீது நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்க  வேண்டும். ஆனால் நிர்வாகம் இதைச் செய்யத் தவறியது. மேலும் நிர்வாகம் பல விஷயங்களை கவனிக்காமல் இருக்கிறது என்று சொல் கிறார்கள். மாணவர்களின் போராட்டம் நியாயமானது, அதோடு இது கல்வி நிறுவனத்தை மேலும் ஜனநாயகத்தன்மை வாய்ந்ததாக மாற்றும்.   நிர்வாகத் தரப்பின்  பதில்கள், எனக்கு அதிருப்தியை கொடுக் கின்றன. இனியும் அந்த நிர்வாகத்தின் ஒரு பாகமாக அந்தக் குழுவில் இணைந்து பயணிக்க விரும்பவில்லை” என்றார்.