districts

விவசாயிகள் சங்கம் தொடுத்த வழக்கில் முந்திரி மரங்களை அழிப்பதற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

கடலூர், ஜன.30- மலை அடி குப்பம் கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்  சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் முந்திரி மரங்களை அழிக்கும் நட வடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. கடலூர் ஒன்றியம், மலை யடிக்குப்பத்தில் 200 ஆண்டுகளுக்கு மேலாக 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் உள்ள 165 ஏக்கர் பரப்பளவு கொண்ட மலைப்பகுதியை சமப்படுத்தி முந்திரி, வாழை, பலா, மணிலா உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்து வருகின்றனர்.  இந்த நிலையில், அந்த நிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் வழங்கி யது. பின்னர், எந்தவித அறிவிப்பும் இல்லாமல் காவல்துறை யினர் துணை யுடன் கோட்டாட்சியர், வட்டாட்சியர் தலைமையில் வருவாய் துறையினர் இயந்திரங்களை கொண்டு மரங்களை அப்புறப்படுத்தினர். அவசர வழக்கு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்களுடன் மார்க்சிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது. மேலும், பாதிக்கப்பட்ட கிராம மக்களும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இணைந்து தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கறிஞர் திருமூர்த்தி இந்த  மனுவை தாக்கல் செய்தார். அதை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், விவ சாயத்தை அழிப்பதற்கு தடை விதித்தது. இந்த தடை திங்கட்கிழமை (பிப்.3) வரை நீடிக்கும் என்று நீதி மன்றம் தெரிவித்துள்ளது.  அழிப்பு பணி நிறுத்தம் இதையடுத்து, நீதிமன்றத்தின் உத்தரவை மாவட்ட நிர்வாகத்திற்கு அரசு வழக்கறிஞர் தெரிவிக்க முயன்ற போது மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட எந்த அதிகாரிகளும் தொலை பேசியை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலை வர்கள்  மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்தனர். அதன்பிறகு,  அரசு வழக்கறிஞர் ஆட்சியரிடம் தொலை பேசியில் பேசியுள்ளார். பின்னர், மலையடி குப்பம் கிராமத்தில் விளை நிலங்களை அழித்துக் கொண்டிருந்த 40க்கும் மேற்பட்ட ஜேசிபி எந்திரம் உடனடியாக அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது.  விவ சாய அழிப்பு பணி முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.  மார்க்சிஸ்ட் கட்சிக்கு  கிராம மக்கள் நன்றி பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜே.ராஜேஷ் கண்ணன், ஒன்றியச் செயலாளர் ஆர்.பஞ்சாட்சரம், விவசாயி கள் சங்க மாவட்டப் பொருளாளர் எஸ். தட்சிணாமூர்த்தி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் என்.அய்யா துரை, எம்.கலைவாணன், வாலி பர் சங்க மாவட்ட துணை செயலாளர் அரசன் ஆகியோர் நீதிமன்ற நடவடிக்கை களை  கிராம மக்களிடம் விளக்கினர். அப்போது, வாழ்வாதா ரத்தை இழந்து தவித்த அந்த பகுதி மக்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.