districts

img

கடலூர் மாவட்டத்தில் கனமழை: ஏரிகள் குளங்கள் தீவிர கண்காணிப்பு

கடலூர், நவ.13- காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழ்நாடு மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடல் பகுதியில் நிலவுகிறது. ஆகையால் கட லூர் விழுப்புரம் உள்ளிட்ட 22 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் புதன்கிழமை முதல் 16 ந்தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறி வித்துள்ளனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகின்றது. மேலும் பகல் நேரங்களில் சுட்டு எரிக்கும் வெயிலும், மாலை நேரங்களில் மழையும் தொடர்ந்து பெய்து வருவதால் பருவநிலை மாற்றம் ஏற்பட்டு பொதுமக்களுக்கு உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் செவ்வாய் இரவு முதல் கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், விருத்தாச்ச லம், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, வேப்பூர், சேத்தியாதோப்பு, லால்பேட்டை, புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட மாவட்ட முழுவதும் பரவலாக தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. இதனால் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மாவட்டம் முழுவதும் ஏரிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். கடலூரில் தொடர் மழை காரண மாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் பாரதி சாலை, நேதாஜி சாலை, திருப்பாதிரிப்புலியூர் போன்ற சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றியும், வாகன ஓட்டிகள் மிகக் குறைந்த அளவில் காணப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8.30 மணி யோடு 24 மணி நேரத்தில் 736.30மி.மீ மழையளவு பதிவாகி உள்ளதாக கடலூர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.