சென்னை, ஜூன் 17- பட்டினப்பாக்கம் பிஆர்ஓ காவலர் குடியிருப்பில் மூன்றாவது தளத்தில் வசிப்பவர் மோ.ஜான் ஆல்பர்ட் (33). இவர், டிஜிபி அலுவலகத்தில் உளவுத் துறை காவல் உதவி ஆய்வாளராக வேலை செய்து வந்தார். ஜான் ஆல்பர்டின் மனைவி ஜான்ஸி ஜென்ஸி.
இத்தம்பதிக்கு 2 வயது ஒரு குழந்தை உள்ளது. ஆல்பர்ட் திங்கள்கிழமை காலை பணிக்கு வேகமாக புறப்பட்டுள்ளார். அப்போது அவரது தனது சட்டையை இஸ்திரி செய்ய அறைக்குள் சென்றார். வெகுநேரமாகியும் ஆல்பர்ட் தனது அறையை விட்டு வெளியே வரவில்லை.
இதையடுத்து ஜென்ஸி, கதவை திறக்க முயன்றார். ஆனால் கதவு உள்பக்கமாக பூட்டி யிருந்ததால், அவரால் கதவை திறக்க முடியவில்லை. இதையடுத்து ஜென்ஸி, பக்கத்து வீட்டினர் உதவி யுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஆல்பர்ட் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி யடைந்தார். உடனே ஜென்ஸி உள்ளிட்டோர், ஆல்பர்டை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் சம்பவ இடத்திலேயே சிறிது நேரத்தில் ஆல்பர்ட் உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டினப்பாக்கம் காவல் துறையினர் ஆல்பர்ட் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, ஆல்பர்ட் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.