districts

img

தர்பூசணி, கிர்ணி பழங்களுக்கு காப்பீடு: விவசாயிகள் கோரிக்கை

செங்கல்பட்டு, ஏப். 15- தர்பூசணி, கிர்ணிப்பழம் உள்ளிட்ட கொடி வகை பயிர்களை காப்பீடு திட்டத்தில் இணைக்கவேண்டும் என  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ள னர். செங்கல்பட்டு மாவட்டம், லத்தூர்,  சித்தாமூர் ஒன்றியங்களில் தமிழ் நாட்டிலேயே அதிகமாக கொடி பழவகையான தர்பூசணி, கிர்ணி பழம்   பயிர்செய்யப்படுகிறது. இப்பகுதியில் உள்ள பவுஞ்சூர்  வெளிக்காடு விழுத மங்கலம்  ஆகிய பகுதிகளில் சுமார் 600  ஏக்கரில் தர்பூசணி மற்றும் கிர்ணி பழம்  ஆண்டுதோறும் பயிரிடப்படுகிறது.  கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பெருந்தொற்று காரணமாக பயிரிடப்பட்ட தர்பூசணி பழங்கள் ஏற்றுமதி செய்ய முடியாமல் சில்லறை விற்பனையும் செய்ய முடி யாமல் விளை நிலத்திலேயே அழுகும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த  ஆண்டும் தரமற்ற விதை மற்றும்  நோய்  தாக்குதலால் போதிய விளைச்சல் இல்லாமல் விவசாயிகள்  நட்டம் அடைந்தனர்.  இந்த ஆண்டு ஒரு ஏக்கருக்கு விதை  மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட செல வினங்களுக்காக ரூ 65 ஆயிரம் முதல்  75 ஆயிரம் வரை செலவு செய்து சுமார் 600 ஏக்கருக்கு மேல் தர்பூசணி, கிர்ணி கொடி வகை பயிர்களை விவசாயி கள் பயிர் செய்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு திடீரென கோடையில்  பெய்த மழை யால் புதிய வகை வைரஸ் நோய்  மற்றும் பூச்சி தாக்கியதால் தர்பூசணி  கொடியின் வேர்கள் அழுகியது.  இதனால் கொடிகள் அனைத்தும் காய்ந்து விட்டன.  தர்பூசணி பழங்கள்  பெருக்காமல் காய்கள் ருசித்தன்மை இல்லாமல் வைரஸ் நோய் தாக்கிய தால் விவசாயிகளுக்கு மிகப்பெரிய நட்டம் ஏற்பட்டுள்ளது.

இதனால் விவசா யிகள் கடன் சுமையில் சிக்கியுள்ள னர்.  இதனால்  மீண்டும் விவசாயிகள்  விவசாயம் செய்ய முடியாத நிலை  ஏற்பட்டுள்ளது. அரசு விவசாயிக ளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை  விடுத்துள்ளனர். அரசு நிவாரணம் கொடுத்தால் மட்டுமே அடுத்த ஆண்டு  பயிர் செய்ய முடியும் என தெரிவித் துள்ளனர். நீண்ட காலமாக இப்பயிர்களை விளைவித்து வரும் விவசாயிகள் கொடி வகை பயிர்களை காப்பீடு திட்டத்தில் இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதற்கு அரசு செவி சாய்க்க வில்லை என கூறப்படுகிறது.  கொடி வகை பயிர்களை காப்பீட் டில் இணைத்தால் இதுபோன்ற காலங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கொடுத் தால் சற்று பாதிப்பு ஏற்படாமல் இருக் கும். அடுத்த ஆண்டாவது கொடி வகை பயிர்களை காப்பீட்டில் இணைக்க  வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள்  கோரிக்கை விடுத்துள் ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.அரிகிருஷ்ணன், மாவட்ட செயலா ளர் கே.வாசுதேவன், செய்யூர் வட்ட  நிர்வாகி ஜெய்சங்கர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண் டனர். மேலும் பாதிக்கப்பட்ட விவசா யிகளிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்த னர். மேலும் பாதிப்புகள் குறித்து வேளாண் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்களையும் வழங்கி யுள்ளனர்.