ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மட்டுமே வழக்குப் பதிவு செய்ய வேண்டும் போக்குவரத்து இணைஆணையர் தகவல்
சென்னை, நவ. 5- சென்னையில் தீபாவளி சமயங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்கு தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக சென்னை பெருநகர கூடுதல் போக்குவரத்து இணை ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னை பெருநகர கூடுதல் போக்கு வரத்து இணை ஆணையர் சுதாகர் வேப்பேரி யில் உள்ள காவல் ஆணையர் அலுவ லகத்தில் புதிதாக கொண்டுவரப்பட்ட வேக வரம்பு கட்டுப்பாடு குறித்து செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 2003 வருடம் தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டப்படி புதிய வேக கட்டுப்பாடு வாக னங்களுக்கு ஏற்றார்போல் அதிகரித்துள்ள தாக தெரிவித்தார். சனிக்கிழமை (நவ. 4) வேகக் கட்டுப்பாட்டு விதிப்படி 120 வழக்கு கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிய வேக கட்டுப்பாடு குறித்து தனிக் குழு அமைக்கப்பட்டு தீர்மானம் நிறை வேற்றப்பட்டு இருக்கிறது. பொதுமக்கள் பாதுகாப்பாக சாலையில் செல்வதற்காகவே இந்த புதிய வேக கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது என்றும், வாகனம் வேகமாக செல்லும் போது அதன் கட்டுப்பாடு இழக்க நேரிடும். எனவே வேகக்கட்டுப்பாடு மிகவும் அவசியம் என்றும், சாலை காலி யாக இருந்தாலும் வேகமாக செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும் தீபாவளி சமயங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை குறைப்ப தற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக வும் தெரிவித்தார். அண்ணா சாலை யில் புதிதாக அமைக்கப்பட்ட யூடர்ன் பொறுத்தவரை பலரும் பல கருத்துக்களை எழுப்புகிறார்கள். 3 கட்ட சோதனைக்கு பிறகு இந்த யூ திருப்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும், இந்த புதிய யூ திருப்பங்களால் போக்குவரத்து நெரிசல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் கூறினார். இந்த புதிய யூ திருப்பங்கள் பற்றி மக்களிடம் கருத்து கேட்டதற்கு எக்ஸ் தளத்தில் 70 விழுக்காடு மக்கள் இதை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார். சாலை களில் பேருந்துகள் செல்வதற்கு புதிதாக லேன் அமைக்க திட்டமிட்டு வருவதாக வும், பேருந்துகளில் படியில் நின்று பயணிப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். விதிமுறைகளை யாரும் மீறக்கூடாது. காவல்துறையினரும் மீறுவது குற்றம். மேலும் ஆலந்தூரில் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கு என தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கூறி னார். மேலும் ரிமோட் முறையில் அனைத்து சிக்னல்கள் செயல்பட உள்ளதாகவும் கூறிய அவர், காவல் துறையில் வாகன விதி மீறல்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவது ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் மட்டுமே வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும், மீறி வேறு காவலர்கள் வழக்குப்பதிவு செய்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
ஜனப்பன் சத்திரம்-அழிஞ்சிவாக்கம் பகுதியில் இன்று மின்தடை
பொன்னேரி,நவ.5- பொன்னேரியை அடுத்த இருளிப்பட்டு துணை மின் நிலையத்தில் திங்களன்று (நவ.6) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.இதைத்தொடர்ந்து நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை அழிஞ்சி வாக்கம், எம்ஜிஆர் நகர், சித்தி விநாயகர் பண்ணை, சாய் கிருபா நகர், கணேஷ் நகர்,ஸ்ரீ நகர், விருந்தாவன நகர், இருளி பட்டு, சத்திரம், பாதி பகுதி அத்திப்பேடு, எம்கே கார்டன், ஜனப்பன்சத்திரம் கூட்டுச்சாலை, சத்திரம், ஜெகநாதபுரம்,அகரம், குதிரை பள்ளம், ஆமூர் காலனி, கங்கையாடி குப்பம், நெடுவரம் பாக்கம் காலனி, மாலிவாக்கம் போன்ற பகுதிகளுக்கு மின் நிறுத்தம் செய்யப்படுவதாக இருளி பட்டு மின்நிலையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் 326 சதுர கி.மீ அளவில் வடிகால் பணிகள் ஆணையர் தகவல்
சென்னை,நவ.5- சென்னையில் அவ்வப் போது பெய்து வரும் பருவ மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் இருக்க 24 மணிநேரமும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தி யாளர்களிடம் பேசுகையில், தற்போது சென்னையின் சாலைகளில் தண்ணீர் தேங்குவதில்லை. மழை பெய்தாலும் சில மணி நேரங்களில் வடிந்துவிடுகிறது. புழல், ஆலந்தூர், அடையாறில் தேங்கிய மழைநீர் 1 மணிநேரத்தில் வடிய வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 326 சதுர கி.மீ. அளவில் வடிகால் பணி நடைபெற்றுள்ளன. சாலைகளில் பழுது ஏற்பட்டால் 1913 என்ற எண்ணில் பொதுமக்கள் தகவல் கொடுக்கலாம். சென்னையில் 800 ஆக இருந்த தாழ்வான பகுதிகள் 37 ஆக தற்போது குறைந்து உள்ளன. மழை காரணமாக எதிர்பாராத நிலையை சமாளிக்கவும் மாநகராட்சி தயாராக உள்ளது என்றம் அவர் கூறினார்.
வாகன வேகம் கண்காணிப்பு
திருவொற்றியூர், நவ.5- எண்ணூர் விரைவுச் சாலையில் அதிவேகத்தில் வந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து காவலர்கள் எச்சரித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி னர். ஞாயிற்றுக்கிழமை முதல் அபராதம் விதிக்கத் தொடங்கியுள்ளனர். அதி வேகத்தில் வாகனங்களை ஓட்டினால் ரூ.1000 அப ராதம் விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ள னர். முக்கிய சாலைகளில் ஆங்காங்கே ஸ்பீட் ரேடார் கண்காணிப்பு கருவி மூலம் கண்காணித்து வரு கிறார்கள்.
புதிய இன்சூரன்ஸ் திட்டம்
சென்னை, நவ.5- தனியார் பொதுக் காப்பீட்டு நிறுவனமான ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் வாடிகையாளர்களின் விருப்பத்திற்கேற்ப கார் புதிய கார் இன்சூரன்ஸ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் அவர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப பாலிசியை அவர்களே உரு வாக்கிக் கொள்ளும் வசதியை இது கொண்டுள் ளது என்று நிறுவனத்தின் தலைமை செயல் அதி காரி ராகேஷ் ஜெயின் தெரி வித்துள்ளார். இந்த திட்டம் யாரேனும் ஒருவர் குறைந்த கிலோ மீட்டர் தூரம் கார் ஓட்டுபவராக இருந்தாலும் அல்லது எப்போதாவது கார் ஓட்டு பவராக இருந்தாலும் அவர்க ளுக்கு ஏற்ப வடிவமைக்கப் பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
பேருந்து ஓட்டுநரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர் கைது
அம்பத்தூர், நவ. 5- ஆவடி அடுத்த கீழ் கொண்டையார் கிராமத்தில் இருந்து மாநகர பேருந்து ஆவடி நோக்கி வந்து கொண்டிருந்தது. பேருந்தை அம்பத்தூரைச் சேர்ந்த சஜேஷ் (45) என்பவர் ஓட்டினார். அப்போது ஆவடி டேங்க் பேக்டரி சாலையில் வந்து கொண்டிருக்கும் போது, முன்னாள் சென்ற ஆட்டோ மீது பேருந்து லேசாக மோதியது. இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர், பேருந்தில் ஏறி ஓட்டுநரை தாக்கினர். இதனால் பேருந்து சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 கார், 4 மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வாகனங்கள் சேதமடைந்தன. உடனே ஆட்டோ டிரைவர் அங்கிருந்து தப்பி விட்டார். பயணிகள் பேருந்து ஓட்டுநரை ஆவடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆவடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பேருந்து ஓட்டுநரை தாக்கியது ஆவடி அடுத்த கொள்ளுமேடு வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுரேந்தர் (23) என்பது தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் ஆட்டோ டிரைவர் சுரேந்தரை கைது செய்தனர். மேலும் 3 கார்கள், 4 மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தது குறித்து ஆவடி போக்குவரத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊனமுற்ற சாதனையாளர்கள் விருதுக்கு பரிந்துரைகள் வரவேற்பு
சென்னை,நவ.5- ஊனமுற்ற சாதனையாளர்களின் விடாமுயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில், கவின்கேர் மற்றும் எபிலிட்டி ஃபவுண்டேஷன் ஒருங்கிணைந்து நடத்தும் 22 வது கவின்கேர் எபிலிட்டி விருதுகள் 2024க்கான பரிந்துரைகளை வரவேற்கப்படுகின்றன. நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஊன முற்ற சாதனையாளர்களுக்கு வழங்கப்படும், கவின்கேர் எபிலிட்டி விருதுகள் எமினன்ஸ், மற்றும் கேவின்கேர் எபிலிட்டி மாஸ்டரி விருதுகளுக்காக இரண்டு பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. 2003 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த விருது, அதன் 21ம் ஆண்டு பயணத்தில், 91 ஊனம்முற்ற சாதனையாளர்களை கௌரவித்துள்ளது. விருதுக்கு பரிந்துரை செய்வதற்கான கடைசி தேதி வருகிற திங்கட்கிழமை நவ. 20 ஆகும். ஆன்லைன் மூலம் பரிந்துரைக்க www.abilityfoundation.org அல்லது www.cavinkare.com இணையத்தளங்களை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான பயணிகள் அதிகரிப்பு
சென்னை,நவ. 5- சென்னை விமான நிலையத்தில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம், 1,218 விமானங்கள் அதிகரித்து உள்ளன. அதேபோல் பயணிகள் எண்ணிக்கை, 1.8 லட்சம் அதி கரித்துள்ளது. அகில இந்திய அளவில் ஒப்பிட்டுப் பார்க்கை யில், சென்னை விமான நிலையத்தில், விமானங்கள், பயணி கள் எண்ணிக்கை, அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக சுற்றுலாப் பயணிகள், தொழில், வர்த்தக துறையினர் அதிகரித்து வருவதால், இந்த சாதனையை சென்னை விமான நிலையம் படைத்து உள்ளது என்று, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.