districts

img

கூத்தக்குடி கிராமத்தில் மாவட்ட ஊராட்சி குழு சேர்மன் ஆய்வு

 கள்ளக்குறிச்சி, ஜூலை.14- தியாகதுருகம் அருகே கூத்தக்குடி கிராமத்தில் பழைய  காலனி பகுதியில் குடிநீர்  விநியோகம் செய்ய கோரி 50 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் கடந்த  சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்நிலையில்  மாவட்ட ஊராட்சி குழு சேர்மன் புவனேஸ்வரி பெருமாள் கூத்தக்குடி பழைய காலனி பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொது மக்களுக்கு  தடையில்லாமல் குடிநீர் வழங்கும் வகையில்  புதிய பைப் லைன் அமைக்க மாவட்ட சேர்மன் நிதியி லிருந்து நிதி ஒதுக்கீடு செய்வதாகவும், எனவே உடனடியாக பைப் லைன் அமைக்கும் பணிகளை தொடங்குமாறு அதிகாரிடம் அறிவுறுத்தினார். மேலும் வருங்காலங்களில் கூடுதலாக ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்கப் படும் எனவும் பொதுமக்களிடம் உறுதியளித்தார். அப்போது ஒன்றிய குழு சேர்மன் தாமோதரன், ஒன்றிய குழு துணை சேர்மன் நெடுஞ்செழியன், வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் முருகன், ஒன்றிய கழக செயலாளர் அண்ணாதுரை, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கொளஞ்சிவேலு, ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா நாராயணசாமி மற்றும் பொதுமக்கள் பலரும் உடன் இருந்தனர்.