districts

img

புதுச்சேரி மத்திய பல்கலைக் கழக மாணவர்கள் மீது தாக்குதல்

புதுச்சேரி, ஆக.13- புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல் கண்காணிப்பாளர் முருகையன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம்   வலி யுறுத்தியுள்ளது. புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவ விடுதிகளில் போதிய அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர கோரி இந்திய மாணவர் சங்கம் தலைமையில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் உள்ள தலைமை விடுதி காப்பாளர் அலுவலகம் முன்பு திங்களன்று (ஆக.12)  இரவு ஆர்ப்பாட்டம் நடத்தினர். நியாயமான கோரிக்கைகளை வலி யுறுத்தி போராட்டம் நடத்திய மாண வர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் முன்வர வில்லை. இந்த நிலையில், அங்கு வந்த புதுச்சேரி பல்கலைக்கழக ஓஎஸ்டி காவல் கண்காணிப்பாளர் முருகையன்,  பல்கலைக்கழக ஆண் காவலர்களை கொண்டு மாணவர்களை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் 5 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. அந்த மாணவர்கள் உடனடியாக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். டிஜிபியிடம் புகார் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல் கண்காணிப்பாளர் முருகையன் மற்றும் பல்கலைக் கழக காவலர்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  இந்திய மாணவர் சங்கத்தின் புதுச்சேரி மாநில செயலாளர் பிரவீன்குமார் தலை மையில் நிர்வாகிகள்,  புதுச்சேரி காவல்துறை தலைமை அலுவலகத்தில் புகார் அளித்தனர்.