6 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை,டிச.21- தமிழ்நாட்டில் 6 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- தென்கிழக்கு அரபிக்கடல் பகுதி களில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வருகிற 27 ஆம் தேதி வரை, தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக் கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய க்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காண ப்படும். மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதியில், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடை யிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.
இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி
சென்னை,டிச.21- முன்னாள் காங்கிரஸ் தலைவரும் ஈரோடு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தனது பிறந்தநாளையொட்டி ஈரோட்டில் நடை பெற்ற அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிறகு சென்னைக்கு திரும்பி னார். அப்போது அவருக்கு கடுமையான காய்ச்சல் இருந்தது. இதையடுத்து போரூரில் உள்ள தனி யார் மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரி சோதனை செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசுக்கு வடிவேலு பாராட்டு
சென்னை,டிச.21- மழை-வெள்ள நிவாரணப் பணி களை தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்து வருகிறது என திரைக் கலைஞர் வடிவேலு பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நகைச்சுவை கலைஞர் வடி வேலு, “நிவாரணம் வழங்கும் பணி களில் தமிழ்நாடு அரசு மிகச் சிறப்பாக செய்து வருகிறது. மக்களின் வேதனை களை முதலமைச்சர் உணர்ந்ததால் தான், அமைச்சர்களும் களத்தில் நன்றாக பணி செய்து வருகின்றனர்” என்றார். மழையால் ஏற்படும் உயிரிழப்பு களை வெகுவாக குறைந்தது மிகப் பெரிய விஷயம், அரசை குறை சொல்ப வர்கள் சொல்லிக் கொண்டே இருக் கட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தங்கம் விலை குறைந்தது
சென்னை,டிச.21- சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்த நிலை யில், வியாழக்கிழமை (டிச.21) சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.46,600-க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.5,825-க்கும் விற்பனையானது.வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 50 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.70-க்கும் பார் வெள்ளி ரூ.80,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தலித் மக்களுக்கான நலத்திட்டங்கள்: கண்காணிப்பு குழு அமைக்க வலியுறுத்தல்
புதுச்சேரி,டிச.21- தலித் மக்களுக்கு நல திட்டங்களை செயல்படுத்த கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி புதுச்சேரி தலைவர் என். கொளஞ்சி யப்பன், செயலாளர் ஆர்.சரவணன் ஆகியோர் முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரி மாநிலத்தில் தலித் மற்றும் பழங்குடியின மாணவர்க ளுக்கு ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை அனைத்து மாணவர்களுக்கும் எந்த தனியார் நிறுவனத்தில் படித்தால் அதற்கான முழு செலவை அரசே ஏற்கும் என்ற திட்டம் தலித் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இத்திட்டம் துணை திட்ட நிதி மூலம் செயல்படுத்தப்படுகிறது. துணை திட்ட நிதி அனைத்து தலித் மக்களுடைய எண்ணிக்கையும் கணக்கில் கொண்டு தான் பெறப்படு கிறது. தலித் மாணவர்கள் மீது அதிக அக்கறை உள்ள திட்டமாக இது அமைந்துள்ளது. 1964 ஆண்டு சான்று இல்லாத மாண வர்களுக்கு இந்த திட்டம் மறுக்கப்படு கிறது. எனவே மாநில அரசு அதில் கவனம் செலுத்தி இத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் 28 ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு தங்கும் விடுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக உணவில் அசைவம் வழங்கப்படாமல் இருந்த நிலை யில், தற்போது வழங்கப்பட்டு வரு வது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், ஒரு சில இடங்களில் உணவு தரமாக இல்லை குறிப்பாக தரமற்ற கறி (வெறும் கொழுப்பு மட்டும்) பெயருக்கு சமைத்து வழங்கப்படுகிறது. இந்த காட்சி வீடியோவில் சமூக வலை தளங்களில் பகிரப்பட்டு வரு கிறது. எனவே, இதில் சம்பந்தப் பட்ட அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மாணவர்கள் தங்கும் விடுதி களில் கழிவறைகளை முறையாக பராமரிக்கப்படாமல் மோசமான நிலையில் உள்ளது. பல இடங்களில் கழிவறை கதவுகளுக்கு தாழ்ப்பால் கிடையாது, கடந்த மூன்று ஆண்டு காலமாக அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டிய இலவச பாய்,தலையணை வழங்கப்படா மல் உள்ளது. எனவே, புதுச்சேரி அரசு மாண வர்கள் நலன் கருதி உடனடியாக தங்கும் விடுதி மாணவர்களுக்கு ஊட்டச்சத்துடன் கூடிய உணவு வழங்க ஏற்பாடு செய்ய தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் வேண்டுகிறோம். கல்வி வேலைவாய்ப்புக்கான தலித் இடஒதுக்கீடு 16 விழுக்காடு புதுச்சேரியில் அமலில் இருந்தாலும் கல்வியில், வேலைவாய்ப்பில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள அருந்ததியர்களின் இட ஒதுக்கீடு களின் பலன்களை அனு பவிக்க முடியாத நிலை உள்ளது. ஆதலால் அருந்ததியர் மக்கள் தொகை அடிப்படையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அருந்த தியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வேண்டுகிறோம். மேலும் புதுச்சேரி நரிக்குறவர் மக்கள் தமிழ் நாட்டை போன்ற பழங்குடியின பட்டியலில் இணைக்க நடவடிக்கை எடுக்கு மாறு வேண்டுகிறோம். புதுச்சேரி அரசு சிறப்புக் கூறுகள் திட்ட நிதியை முழுமையாக தலித் மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு முழுமையாக செலவிட கேட்டுக் கொள்கிறோம். தலித்துகளுக்கு இதர சமூக நலத்திட்டங்களை அமலாக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதை சில தலித் மற்றும் ஜனநாயக அமைப்பை உருவாக்கி கண்காணிப்பு குழு ஒன்றை அமைத்திடுவோம் கேட்டுக் கொள்கிறோம். இதுவரை 35 விழுக்காடு நிதி மட்டுமே துணை திட்ட நிதி செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த 3 மாதத்தில் உடனடியாக செலவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு தெரிவித்திருக் கிறார்கள்.
திருப்பத்தூரில் பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள்
திருப்பத்தூர், டிச.21- திருப்பத்தூர் சிஐடியு அலுவலகத்தில் பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா கொடியேற்றத்துடன் மாவட்ட தலைவர் தேவன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் ஜி.ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர். தேவன் மாவட்ட தலைவராக தேவன், மாவட்ட செயலாளராக குப்புலிங்கம், கண்ணபிரான் பொருளாளராக கண்ணபிரான் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். காசி (சிபிஎம்), ரங்கன் (மின்வாரிய ஊழியர் ஓய்வு பெற்றோர் அமைப்பு) கேசவன் (சிஐடியு) செல்வம் (மத்திய மாநில ஓய்வூதிய சங்கம்), காமராஜ் (விவசாயிகள் சங்கம்) வாழ்த்தி பேசினர். நிறைவாக பழனிசாமி நன்றி கூறினார்.
வேலை வாய்ப்பு முகாம்
விழுப்புரம்,டிச.21- விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் டிச.23 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது என வேலைவாய்ப்பு உதவி இயக்குநர் பாலமுருகன் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இதில் 18 வயது முதல் 40 வயது வரையிலான வேலை தேடுபவர்கள் கலந்து கொள்ளலாம். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்கள், பொறியியல், ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மசி முடித்தவர்களுக்கு முகாமில் பங்கேற்று பயனடையலாம். இதில் 150க்கு மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கு தேவையான தகுதியான 20,000க்கும் மேற்பட்ட நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். முகாமில் ஆண் பெண் இரு பாலரும் கலந்து கொள்ளலாம். மேலும், இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கு தேவையான திறன் பயிற்சி பெறுவது தொடர்பாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்குவதற்கும், அயல்நாட்டு வேலைவாய்ப்பு பெறுவது தொடர்பாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் ஆலோசனைகள் வழங்குகிறது. வேலை தேடுபவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி அவர்கள் தகுதிக்கு ஏற்ற சிறந்த ஊதியத்தில் பணி நியமன ஆணை பெற்று பயன்பெறலாம் என்று தகுதியுடையோர் வேலை தேடுபவர்கள் இணையதளத்தில் தங்களது கல்வி தகுதி குறித்த விவரங்களை பதிவு செய்து இவ் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கும். மேலும் விவரங்களுக்கு 04146 226417 மற்றும் 9499055906, 9080515682 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மதகொண்டப்பள்ளியில் ராகி கொள்முதல் நிலையம் திறப்பு
கிருஷ்ணகிரி, டிச.21- தேன்கனிக்கோட்டை வட்டம், தளி ஊராட்சி ஒன்றியம், மதகொண்டப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்க வளாகத்தில் ராகி (கேழ்வரகு) கொள்முதல் நிலையத்தை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி திறந்து வைத்தார். ஓசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ், மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரீப் பருவத்தில் விவசாயிகளிடமிருந்து ராகி கொள்முதல் செய்வதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராகி அதிகமாக சாகுபடி செய்யும் ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை ஆகிய வட்டாரங்களில் நேரடி ராகி கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சிறு குறு விவசாயிகள் சாகுபடி செய்த ராகியை கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து உரிய சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட ஆவணங்களை அளித்து கேழ்வரகு கல், மண், தூசி நீக்கம் செய்து தரம் பிரித்து கொண்டு வந்து கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யலாம். மேலும் அரசு நிர்ணயம் செய்த விற்பனை தொகையை குவிண்டால் ராகி ரூ. 3,846 என்ற அடிப்படையில் கொள்முதல் செய்யப்பட்டு பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கூடுதல் ஆட்சியர் வந்தனா கார்க், ஓசூர் சாராட்சியர் பிரியங்கா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் சக்தி சரள், ஓசூர் மாநகராட்சி துணை மேயர் ஆனந்தைய்யா, ஒசூர் ஒன்றிய குழுத் தலைவர் சீனிவாச ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காலமானார்
கிருஷ்ணகிரி,டிச.21- தரைக் கடை, தள்ளு வண்டி நடைபாதை வியாபாரிகள் சங்கம் சிஐடியு ஓசூர் வட்டத் தலைவர் குணசேகரன் தந்தை கிருஷ்ணன் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பல னின்றி டிச.20 அன்று காலமானார். அவருக்கு வயது 77. அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கட்சி மாநகர குழு செய லாளர் சி.பி.ஜெய ராமன், எஸ்.ஆர்.ஜெயராமன், சேது மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஆஞ்சலமேரி, சிஐடியு மாவட்டத் தலைவர் வாசுதேவன், சீனிவாசன், ஆனந்த குமார் கிளை செய லாளர்கள் மஞ்சு, மருதையா உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
எண்ணை கழிவால் பறவைகள் பாதிப்பு
சென்னை,டிச.21- சென்னையில் மிக்ஜம் புயல்மழையால் ஏற்பட்ட எண்ணை கசிவால் எண்ணூர் முகத்துவார பகுதியில் உள்ள அலை யாத்தி காடுகள் மற்றும் பற வையினங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. இந்த பாதிப்புகள் குறித்து வனத்துறை யினரும், பறவைகள் நல ஆர்வலர்களும் தொடர்ச்சி யாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வின் போது பெலிக் கான் பறவைகள் உள்பட பல்வேறு பறவை இனங் கள் தங்களது தோற்றத்தை இழந்து எண்ணெய் தோய்ந்த உடலுடன் காணப் பட்டன.இதே போன்று ஏராளமான பறவைகளை வனத்துறையினரும், சுற்றுச்சூழல் துறையினரும் கண்டறிந்துள்ளனர். பறவைகளின் உடலில் ஒட்டியுள்ள எண்ணை கழிவுகள் 2 வாரங்களுக்கு மேலாகிவிட்டதால் உடலோடு ஒட்டி காணப்படு கிறது. இப்படி எண்ணை பிசுபிசுப்புடன் கருமை நிறத்தில் காணப்படும் பறவைகளால் உயரமாக பறக்க முடிவதில்லை. தாழ் வாகவே பறந்து செல்கின் றன. எண்ணூர் முகத்துவார பகுதியில் தேங்கிய எண்ணை கழிவுகளால் ஏராளமான மீனவர்களும், கடல் வாழ் உயிரினங்களும் செத்துமடிந்தன. இப்படி விஷமாகிப் போன மீன்களை சில பறவை இனங் கள் உட்கொண்டுள்ளன. பின்னர் அந்த மீன்உணவு கள் ஒத்துப் போகாததால் அவற்றை கக்கியுள்ளன. இந்த காட்சிகளையும் வனத் துறையினர் நேரில் கண்டு ஆய்வு செய்துள்ளனர். எண்ணை கழிவுகளால் உடலில் ஏற்பட்ட பாதிப்பு, நஞ்சாகி போன மீன்களால் தான் பறவை இனங்கள் உயிருக்கு போராடும் நிலை ஏற்பட்டுள்ளதாக சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ள னர்.
வாலிபர் தலையில் கல்லை போட்டு கொலை
மதுராந்தகம், டிச.21- செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே அடையாளம் தெரியாத வாலிபரின் தலை யில் கல்லை போட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. படாளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குமாரவாடி கிராமம் நெடுஞ்சாலை அருகே தனியாருக்கு சொந்தமான பிளாட் உள்ளது. இவ்விடத்தில் வியாழனன்று (டிச.21) 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் படாளம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த மதுராந்தகம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கணினி அடிப்படையிலான விளையாட்டுக்கு ஆதரவு
சென்னை, டிச. 21- கணினி அடிப்படையிலான விளையாட்டு (இ ஸ்போர்ட்ஸ்) முதன்மையான டீம் சோல் அணிக்கு அதிகாரப்பூர்வ பிரதான ஸ்பான்சராக 6 மாதங்களுக்கு உயர்திறன் கொண்ட சிறந்த ஸ்மார்ட்போனாக திகழும் ஐக்யூஓஓ நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து டெல்லியில் நடை பெற்ற நிகழ்ச்சியில் இதற்கான ‘ஐக்யூஓஓ சோல்’ என பெயரிடப்பட்ட புதிய ஜெர்சியை ‘டீம் சோல்’ இணை நிறுவனர் - தலைமை செயல் அதிகாரி அனிமேஷ் அகர்வால், ஐக்யூஓஓ தலைமை செயல் அதிகாரி நிபுன் மரியா ஆகியோர் வெளியிட்டனர். ஐக்யூஓஓ நிறுவனம் இந்தியாவில் இ-ஸ்போர்ட்ஸ் பிரிவில் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது, மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்ற 19வது ஆசிய விளையாட்டு போட்டியில் அதிகாரப்பூர்வ இ-ஸ்போர்ட்ஸ் கேமிங் ஸ்மார்ட்போனாகா வும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடற்கரையில் ஒதுங்கிய குப்பைகளை ஊழியர்களுடன் சேர்ந்து அள்ளிய ஆணையர்
சென்னை, டிச. 21- சென்னையில் மழை வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட பிளாஷ்டிக் குப்பைகள் தொடர்ந்து கடற்கரையில் கரை ஒதுங்கி வருகின்றன. இதனை சென்னை மாநக ராட்சி ஆணையர் நேரில் ஆய்வு செய்தார். மிக்ஜம் புயல் சென்னை மாவட்டத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.ஆற்றில் சென்ற வெள்ளப்பெருக்கில் அனைத்து குப்பைகளையும் எடுத்து சென்று கடலில் கலந்துள்ளது. இந்நிலை யில் பிளாஸ்டிக் குப்பைகள் போன்றவை சென்னை கடற்கரை பகுதிகளில் கரை ஒதுங்கியவண்ணம் உள்ளன. அதை யொட்டி டன் கணக்கில் குப்பைகள் அகற்றப் பட்டு வருகிறது. இதனை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவரும் தூய்மை பணியாளர் களுடன் இணைந்து கடற்கரையில் இருந்த குப்பைகளை அகற்றினார். பின்னர் மாநகராட்சி ஆணையர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் தான் நம்முடன் இணைந்து குப்பைகளை அகற்றி வருகின்றனர். சராசரியாக ஒரு நாளைக்கு 5 ஆயிரம் மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 14 நாட்களில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பை களை அகற்றி வருகின்றனர். கடற்கரையில் இருந்து தொடர்ந்து குப்பைகள் வந்து கொண்டே இருக்கின்றன. சிலர் நீர் வழித்தடங்களில் குப்பைகளை கொட்டும் இடங்களாக பயன்படுத்தி வருகின்றனர். பிளாஸ்டிக் பொருட்கள், தெர்மாகோல் போன்றவை அள்ளப்பட்டு வருகிறது. மேலும் கண்ணாடி பாட்டில்கள் போன்ற வையும் கிடக்கிறது. நாம் முதலில் இதனை தடுக்க வேண்டும். இயற்கையாக வெள்ளம் வரும் சூழல் நாம் செயற்கையாக இது போன்ற செயலில் ஈடுபடும் போது குப்பைகள் ஆற்றில் நீர் செல்ல விடாமல் தடுக்கிறது. இதனை நாம் முற்றிலும் தடுக்க வேண்டும். இது போன்ற செயல்களில் நாம் இனியாவது ஈடுபடக்கூடாது என்று அவர் கேட்டுக்கொண்டார்.