ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் திங்களன்று (டிச. 30) மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தலைமையில் நடைபெற்ற விழாவில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்து உயர்கல்வி பயின்று வரும் 30 கல்லூரிகளைச் சேர்ந்த 573 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப் பெண் விரிவாக்கத் திட்டத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி தொடங்கி வைத்தார்.