வேலூர். செப்.4 - வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா பேரூராட்சி யில் ரூ.57.83 லட்சம் மதிப் பீட்டில் 16 கடைகளையும், பேரணாம்பட்டு நகராட்சி யில் ரூ.75 லட்சம் மதிப்பீட் டில் 16 கடைகளையும் கொண்ட உழவர் சந்தை களை தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயி லாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பெ.குமார வேல் பாண்டியன், அணைக் கட்டு சட்டமன்ற உறுப்பி னர் ஏ.பி.நந்தகுமார் பள்ளி கொண்டா உழவர் சந்தையை பார்வை யிட்டனர். பள்ளிகொண்டா பேரூராட்சியில் ரூ.57.83 லட்சம் மதிப்பீட்டில் 16 கடைகள் கட்டப்பட்டுள்ளது. இதில் அலுவலகம், சிறப்பு கடை, பெண்கள் மற்றும் ஆண்கள் கழிவறை ஆகி யவை உழவர் சந்தையில் கட்டப்பட்டுள்ளது. இதே போன்று பேர்ணாம்பட்டு நகராட்சியில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் 16 கடைகள் கட்டப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாபு, அணைக் கட்டு வட்டாட்சியர் வேண்டா, பள்ளிகொண்டா பேரூராட்சி தலைவர் சுப்பிரியா, செயல் அலுவலர் உமாராணி, அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சி.பாஸ்கரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கிருஷ்ணமேனன், மாவட்ட ஊராட்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (வேளாண்மை) வெங்கடேசன், துணை இயக்குநர்கள் (வேளாண் விற்பனை) கலைச்செல்வி, (வேளாண் நுண்ணுயிர் பாசனம்) ஸ்டீபன் ஜெயகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.