districts

img

சுகாதார அலுவலரின் அலட்சியபோக்கு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்,அக்.11-  விக்கிரவாண்டி வட்டம், கானை ஒன்றியத்திற்கு உட்பட்ட  அத்தியூர் திருக்கையில் உள்ள துணை சுகாதார நிலை யத்தின் பழைய கட்டிடத்தை மாற்றி புதிய கட்டிடம் கட்டி தரவேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தும் உதாசீன மாக செயல்படும் மாவட்ட துணை சுகாதார அலுவலகத்தை கண்டித்து புதனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் சிக்னல் அருகே உள்ள மாவட்ட துணை சுகாதார அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு கட்சியின் காணை ஒன்றிய குழு உறுப்பினர் சி.சடைப்பன் தலைமை தாங்கினார். விவசாய சங்க வட்ட துணைத்தலைவர் வி.முருகன் முன்னிலை வகித்தார், ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்டக் செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார், வி.ராதா கிருஷ்ணன், ஆர்.மூர்த்தி, ஆர்.டி‌.முருகன், மாவட்ட குழு உறுப்பினர் ஏ.நாகராஜன், யு.கார்க்கி, ஒன்றிய செயலாளர் பி.சிவராமன்,  ஆகியோர் கலந்து கொண்டு  பேசினர். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அங்கேயே தங்கி  வேலை பார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பேருந்து  நிலையம் முதல் பள்ளிக்கூடம் வரை உள்ள சாலையை தார்  சாலையாக மாற்றித் தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஏ.ராஜிவ்காந்தி,ஆர்.மணி கண்டன், ஆர்.ராமமூர்த்தி,  கிளைச் செயலாளர் சி.அழகு நாதன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.