districts

img

மத்தியப் பல்கலை., மாணவர் விடுதியில் புழு, பூச்சிகளுடன் சுகாதாரக் கேடான உணவு இந்திய மாணவர் சங்கம் கண்டனம்

திருவாரூர், நவ.12 - திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில் உள்ள நீலக்குடியில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டு வரு கிறது. இப்பல்கலைக்கழகத்தில் இந்தியா முழுவதும் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பல்வேறு பாடப்பிரிவுகளில் கல்வி பயின்று வரு கின்றனர்.  இந்நிலையில் பல்கலைக்கழ கத்தின் விடுதியில் தங்கிப் படித்து வரும் மாண வர்களுக்கு வழங்கும் உணவில் பூச்சிகள்,  புழுக்கள் நிறைந்து சுகாதாரக்  கேடான நிலையில் உணவு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்கலைக்  கழக நிர்வாகத்திடம் மாண வர்கள் புகார் தெரிவித்தும் நட வடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து மாணவர்கள் புகைப் படம் மற்றும் காணொலி  வாயிலாக ஆதாரத்துடன் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பா.சுகதேவ் தெரிவிக்கையில், “கடந்த இரு தினங்களுக்கு முன்பாக இச்செய்தியை கேள்விப்பட்டு பல்கலைக்கழகத்திற்கு நேரடி யாக இந்திய மாணவர் சங்கத்தின் நிர்வாகிகள் சென்றி ருந்தோம். ஆனால் பல்கலைக்கழக நிர்வாகம் எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. மேலும் கேண்டீனை நாங்கள் ஆய்வு செய்வதாக கூறினோம். அதையும் மறுத்துவிட்டனர். தற்போது இந்த பிரச்சனை சமூக ஊடகங்களில் பரவி உள்ளது. பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களுக்கு வழங்கும் உணவை தரமாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மாணவர்களை ஒன்றிணைத்து மிகப்பெரிய அளவில் பல்கலைக்கழகத்தை கண்டித்து போராட்டம் நடை பெறும்” என்றார். இப்பிரச்சனை குறித்து பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, “பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மற்றும் பேராசிரியர்கள் கொண்ட உயர்மட்ட குழு, உணவகத்தின் சமையல் அறை மற்றும் குடிநீர்  டேங்க்குகளை நேரில்  சென்று ஆய்வு செய்து, காய்கறி யில் புழு இருந்த புகாரைத் தொடர்ந்து சமையல் செய்யும் தனியார் நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. அதைத்  தொடர்ந்து அந்த நிறுவனம் மீது நடவ டிக்கை எடுத்துள்ளதாகவும், பல்கலைக்கழகத்தின் பரா மரிப்பு துறை வாயிலாக தகுந்த நடவடிக்கையில் ஈடுபடுவதாக வும்” பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.