districts

img

ஐசிஎப்க்கு இந்திய ரயில்வேயின் புதுமை கண்டுபிடிப்பிற்கான குழு விருது

சென்னை, ஜூன் 9- ஐசிஎஃப் ( இணைப்பு பெட்டி தொழிற்சாலை)  இயந்திரப் பொறியியல் பிரிவைச் சேர்ந்த 6 பேருக்கு இந்திய ரயில்வேயின் சிறந்த புதுமைக்கான 2020-21ம் ஆண்டிற்கான இரண்டாம் பரிசு வழங்கப்பட்டுள்ளது.   ஐசிஎப் துணைத் தலைமை இயந்திரப் பொறி யாளர் கே.என். மோகன் தலைமையிலான இந்தக்  குழுவில் உதவி பணிமேலா ளர்கள் கே. சந்திரசேக ரன், ஐ. அதிர்ஷ்டநாதன், மற்றும் முதுநிலைப் பகுதிப்  பொறியாளர்கள் பி.இளஞ் செழியன், பி.இளங்கோ, மற்றும் ஜி.மோகனன் ஆகி யோர் இடம்பெற்றுள்ளனர். குளிர் வசதி கொண்ட மற்றும் குளிர்வசதியற்ற எல்எச்பி ரயில் பெட்டிக ளின் தயாரிப்பில் இக்குழு வினரின்  கண்டுபிடிப்பு பயன் ன்படுத்தி கொள்ளப்படும். 16 பாகங்கள் பயன்படுத் தப்பட்டு வந்த பழைய முறைக்குப் பதிலாக, இந்த  புது முறையில் (இரண்டு பக்கவாட்டு இணைப்புச் சுவர்கள், ஒரு கூரை மற்றும் இரண்டு ரயில்பெட்டி  இருமுனைச் சுவர்கள் போன்ற) 5 பாகங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும். இதனால் ரயில் பெட்டிகளின் தயாரிப்புச் செலவும் நேர மும் சேமிக்கப்படும். இந்த கண்டுபிடிப்பிற்காக ஐசிஎப் குழுவிற்கு 1 லட்ச ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்பட உள்ளது. கடந்த ஆண்டில் (2021-22)  இந்த முறை பயன்படுத்தப் பட்டு, 185 குளிர்சாதன வசதி யற்ற எல்எச்பி ரயில்பெட்டி கள் மற்றும் 384 குளிர்சா தன வசதிகொண்ட எல்எச்பி  ரயில்பெட்டிகள் தயாரிப்பில் சுமார் 4 கோடியே 40லட்சத்து 16 ஆயிரத்தி 447 ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளன. இதனால் ரயில்பெட்டிகளின் பக்கவாட்டுச் சுவர்களில் அலை போன்ற தோற்றம்  இல்லாமல் ரயில்பெட்டிக ளின் புறத் தோற்றமும் மேம்படும். என ஐசிஎப் செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது.