districts

இந்தியன் ஆயில் எல்.என்.ஜி ஆலை விரிவாக்கம் பொதுமக்கள் எதிர்ப்பு

திருவள்ளூர், நவ 17- அத்திப்பட்டில் இயங்கும் இந்தியன் ஆயில் எல்.என்.ஜி நிறு வனத்தின் உற்பத்தி திறனை 1 கோடி மெட்ரிக் டன்னாக விரி வாக்கும் திட்டத்திற்கு பொது மக்கள் கருத்து கேட்கும் கூட்டம் வெள்ளியன்று (நவ. 17) நடை பெற்றது. திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பள்ளி காமராஜர் துறை முகத்தில் ஒரு பகுதியில் திரவ மயமாக்கப்பட்ட இயற்கை எரி வாயு தயாரிக்க பயன்படும்  கிடங்கானது இந்தியன் ஆயில் எல்.என்.ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் செயல்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து துறைமுகத்திற்கு கொண்டு வரப்படும்  திரவமயமாக்கப்பட்ட எரிவாயு  சேமிக்கப்பட்டு சுற்று வட்டார பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு குழாய்கள் மூலம் அனுப்பப்பட்டு மின்சாரம் தயாரிக்கவும் மற்றும் பல்வேறு உபயோகிப்பிற்காகவும் எரிவாய்வாக பயன்படுவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.  அதன்படி  இந்தியன் ஆயில் எல்.என்.ஜி பிரைவேட் லிமிடெட் மூலம் ஆண்டொன்றிற்கு 50 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்து வந்த இறக்குமதி தற்போது ஒரு கோடி  மெட்ரிக் டன்னாக விரிவாக்கும் திட்டத்திற்கு பொதுமக்கள் கருத்து கேட்கும் கூட்டம் அத்திப்பட்டு கலைஞர் அரங்கத்தில் திரு வள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் நடை பெற்றது.  பொன்னேரி சட்ட மன்ற உறுப்பினர் துரை  சந்திர சேகர், மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி. ரவி முன்னிலையில் நடைபெற்றது.  கூட்டத்தில் அத்திப்பட்டு, காட்டுப்பள்ளி,எண்ணூர்,மீஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளி லிருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை எடுத்துரைத்தனர். மீஞ்சூர் பகுதியில் தொடர்ந்து காற்று மாசு மற்றும் நில மாசடைவதை எடுத்துரைத்த பொதுமக்கள் மாசுவை குறைப்பதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கண்காணிப்பு மையங்கள் அமைக்க வேண்டும் எனவும் தொழிற்சாலையில் இருந்து லாரி கள் மூலம் கொண்டுவரப்படும் சிமெண்ட் மற்றும் நிலக்கரி கழிவு களால் நிலம் மாசடைவதை கட்டுப் படுத்த வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேலு, துணைத்தலைவர் எம்.டி.ஜி. கதிர்வேலு, காட்டுப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சேது ராமன்,இந்தியன் ஆயில் எல்.என்.ஜி பிரைவேட் லிமிடெட் முதன்மை அலுவலர் பழனிவேல் மற்றும் இதர அலுவலர்கள் சம்பத்குமார்,தனசேகரன்,என்.ஆர்.ரெட்டி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

சிஐடியு எதிர்ப்பு

இது குறித்து சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜயன் தெரி விக்கையில், காட்டுப்பள்ளி பகுதி யில் காமராஜர் துறைமுகத்தில் 50 லட்சம் மெட்ரிக்  டன் உற்பத்தி செய்யக்கூடிய ஐஓசிஎல் நிறு வனத்தின் இயற்கை  எரிவாயு  ஆலை  கடந்த ஐந்தாண்டுகளாக இயங்கி வருகிறது.  அதை மேலும் விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.  இது கடுமை யான ஆபத்துக்களை உரு வாக்கக்கூடியது.   இப்பகுதியில் ஐஓசிஎல்,  எச் பி சி எல்,  பிபிசிஎல் எண்ணெய் நிறுவன முனை யங்கள் உள்ளன.  மேலும் வட சென்னை அனல் நிலையம் ஸ்டேஜ் ஒன், ஸ்டேஜ் 2, ஸ்டேஜ் 3 ஸ்டேஜ் 4 எனவும் வல்லூர் அனல் மின் நிலையம் இண்டேன் கேஸ் பிளாண்ட் அருகருகே உள்ளன. மேலும் அதானி துறைமுகம் மூலம் கப்பலிருந்து  இயற்கை எரிவாயு இறக்கி குழாய் மூலம் காலாஞ்சி, ஊரணம்பேடு  பகுதி யாக செல்லும் ஏற்பாடு செய்யப்படு கிறது. அருகிலேயே ஜே எஸ் டபிள்யூ நிறுவனத்தின் நிலக்கரி சேமிப்புக்கிடங்கு உள்ளது.   இதில் ஆயிரக்கணக்கான டன் நிலக்கரி சேமித்து வைக்கப் பட்டுள்ளது. ஆக இந்தப் பகுதி முழுவதுமே எரிசக்தி பொருட்களைக் கொண்ட பகுதி யாக அமைகிறது. இத்தகைய நிலை யில் 50 லட்சம் டன் என்பதை ஒரு கோடி மெட்ரிக் டன் ஆக உயர்த்து வது எண்ணூர், மீஞ்சூர் பகுதி மக்களின் வாழ்வியலை பாதிக்கும்.மேலும் மேலும் ஆபத்துக்களை உரு வாக்க கூடாது என்பதை அரசு உணர்ந்து, இந்த விரிவாக்க திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது இந்த தடவை எரிவாயு அமைவதை ஒட்டியே தமிழக அரசும் எண்ணூர் அனல் மின் நிலையத்தில் 2000 மெகா வாட் எரிவாயு மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.