districts

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஓட்டேரி பி 2 காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட இளைஞர் ஆகாஷ் (21) மரணம் தொடர்பான  விசாரணையை நேர்மையாக நடத்த வேண்டும், சாட்சிகள் கலைக்கப்படுதல், மிரட்டல் ஆகியவை தடுக்கப்பட வேண்டும் ஆகவே விசாரணை முடியும் வரை சம்மந்தப்பட்ட காவலர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வடசென்னை மாவட்டக் குழு சார்பில் மாவட்டத் தலைவர் ஜி.நித்தியராஜ் தலைமையில் ஓட்டேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் எல்.பி.சரவணத்தமிழன், பொருளாளர் அ.விஜய், மாநிலக் குழு உறுப்பினர்கள் ஆர்.அபிராமி, ஆர்.தமிழ்ச்செல்வி, திரு.வி.க.நகர் பகுதி தலைவர் எம்.ரியாஸ், செயலாளர் எஸ்.சுரேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.