விழுப்புரம்,ஜன.28- விக்கிரவாண்டி-கும்பகோணம் 4-வழிச்சாலை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி மக்களை திரட்டி தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் எச்சரித்துள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் விழுப்புரம், கடலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், விழுப்புரத்தில் நடை பெற்றது. கூட்டத்திற்கு விழுப்புரம் மாவட்ட தலைவர் எஸ்.பிர காஷ் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் கார்த்திக், விழுப்பு ரம் மாவட்டச் செயலாளர் சே.அறி வழகன், கடலூர் மாவட்டச் செய லாளர் வினோத்குமார் உட்பட கடலூர்-விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், கடந்த 2016-ம் ஆண்டு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிர வாண்டியில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர் இடையே 165 கி.மீ. சாலை மறுசீரமைப்பு பணி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது, அதனைத் தொடர்ந்து பணிகள் தொடங்கி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. பணி தொடங்கி 8 ஆண்டுகளாகியும் இன்னும் முடிக்கப் படவில்லை. தற்போது இந்த சாலையில் உள்ள பெரிய பள்ளங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வருகின்றனர். விக்கிரவாண்டி முதல் கும்பகோணம் வரை பல இடங்களில் நான்கு வழிச்சாலை பகுதியளவில் நடந்தது. அது முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த புதிய சாலைகள் அமைத்து, நீண்ட காலமாகி,பராமரிக்கப்படாமல் உள்ள நிலையில் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக விக்கிரவாண்டி அருகே பனைய புரம் முதல் கோலியனுார் கூட்டு சாலை வரை பல இடங்களில் சாலை சேதமாகி ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த பள்ளங்கள் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது. விக்கிரவாண்டி-கும்பகோணம்-தஞ்சாவூர் சாலை மறு சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி விழுப்புரம், கடலூர் மாவட்டம் சார்பில் சாலையோரப் பகுதிகளில் உள்ள கிராம மக்களை திரட்டி இந்திய ஜன நாயக வாலிபர் சங்கமும் இணைந்து வருகிற பிப்ரவரி 13 அன்று விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் கூட்டுசாலையிலும், 14அன்று கடலூர் மாவட்டம், நெய்வேலியிலும், 15-ந் தேதி பண்ருட்டியிலும் தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றினர்.