districts

img

உக்ரைன் மறுக்கட்டமைப்பில் பெரிய வாய்ப்புகளை பெற காத்திருக்கும் இந்திய நிறுவனங்கள்

சென்னை, நவ.12- உக்ரைன் மறுகட்ட மைப்பில் இந்திய நிறு வனங்களுக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என்று பொறியியல் ஏற்று மதி மேம்பாட்டு கவுன்சில் (இஇபிசி)  தலைவர் அருண் கரோடியா கூறி னார். சென்னையில் நவ.27 முதல் 29 வரை சர்வதேச பொறியியல் கொள் முதல் கண்காட்சி நடைபெற வுள்ளது. இந்த கண்  காட்சி குறித்து செய்தி யாளர்களிடம் பேசிய அவர். உக்ரைன் மறுகட்ட மைப்பிலிருந்து பெரிய வாய்ப்புகளைப்  இஇபிசி எதிர்நோக்கியுள்ளது என்றார்.  உக்ரைனின் புனர மைப்புக்கு 1 டிரில்லியன் டாலர் செலவாகும் என்று ஊடகங்களில் பார்த்த்தா கவும் அந்நாடு இயல்பு நிலைக்குத் திரும்பும்போது பெரிய ஏற்றுமதி வாய்ப்பு கள் வரும் என்றார். ரஷ்யாவுடனான போர் நிறுத்தப்பட்டவுடன்.  “உக்ரைன் இந்தியாவிட மிருந்து அதிகளவில் பொறியியல்  பொருட் களை வாங்க விரும்பு கிறது.  ரஷ்யாவும் எங்களிட மிருந்து வாங்க விரும்பு கிறது, ”என்று கரோடியா கூறினார்.  போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்பிக்கை தெரி வித்தார். போரிடும் இரு நாடுகளுடனும் இந்தியா நட்புறவைப் பேணி வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.   2024-25ல் இந்தியாவின் பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி (எஃகு மற்றும் அலுமினியம் உட்பட) 118 பில்லியன் டாலர்களை  தாண்டும் என்றும் இது 2023-24 இல்  109  பில்லி யன் டாலர்களாக இருந்ததா கவும் அவர் கூறினார். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், இந்தியா வின் பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி 5.3 சதவீதம் உயர்ந்து 56 பில்லியன் டாலராக இருந்தது. பொதுவாக ஆண்டின் இரண்டாம் பாதி சிறப்பாகச் செயல்படுவதால், இந்த ஆண்டு ஏற்றுமதிகள் 118 பில்லியன் டாலர்களை எளிதில் தாண்டும் என்று இஇபிசி செயல் இயக்குநர் மற்றும் செயலர் அதிப் மித்ரா கூறினார்.