districts

புதுவை கடற்கரையில் சுதந்திர தின விழா

புதுச்சேரி,ஆக.14-

      கடற்கரை சாலையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் ரங்கசாமி  தேசிய கொடி ஏற்றி வைத்து உரையாற்று கிறார்.

     நாட்டின் 76 வது சுதந்திர தின விழா  புதுச்சேரி கடற்கரை சாலையில் செவ்வாய் கிழமை (ஆக.15) காலை 9 மணிக்கு கொண்டாடப்படுகிறது. புதுச்சேரி முதல்வர்  ரங்கசாமி சுதந்திர தின கொடி ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியா தையை பார்வையிடுகிறார்.  தொடர்ந்து தனது சுதந்திர தின உரை  நிகழ்த்தும் முதல்வர், முப்படைகள், காவல்துறை மற்றும் பள்ளி மாணவ மாண விகளின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிடுகிறார்.

    தொடர்ந்து நடைபெறும்   சுதந்திர தின விழாவில் சிறப்பாக சேவை யாற்றிய பல்வேறு துறைகளை சேர்ந்த வர்களுக்கு பதக்கங்களையும், விருதுகளையும் வாங்கி பாராட்டுகிறார். பின்னர் பள்ளி மாணவர்களின் வண்ணமிகு கலை நிகழ்ச்சியுடன் விழா முடிவடைகிறது.

பலத்த பாதுகாப்பு

     சுதந்திர தின விழாவையொட்டி புதுச்சேரி யின்  விடுதலை போராட்ட தலைவர்களின் சிலைகளுக்கு வண்ணமிகு  விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆளுநர் மாளிகை,   தலைமைச் செயலகம், சட்டப்பேரவை வளாகங்களும் வண்ணமிகு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

     சுதந்திர தினவிழாவையொட்டி தொடர்  விடுமுறையால் வெளி மாநிலங்களை சேர்ந்த  சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளதால், புதுச்சேரி முழுவதும்  பலத்த   பாதுகாப்பு பணியில் காவல்துறையி னர் ஈடுபட்டுள்ளனர். கண்காணிப்பு பணி களும்  பலப்படுத்தப்பட்டுள்ளது.