சென்னை,ஜூன் 17-
சென்ட்ரல் ரயில் நிலைய பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் ரயில் நிலையத்திற்கு வரும் உள்ளுர் மற்றும் வெளி மாநிலப்பயணிகள் அச்சப்படுகின்றனர். தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள் ளனர். சென்னையில் தெரு நாய்களை பிடித்து கொல் வது தடை செய்யப்பட்டதால் யாருமே நாய்களை பிடித்துச் செல்வதில்லை. இதன் காரணமாக நாய்கள் பெருகி விட்டன. ரயில் நிலையத்துக்கு வரும் பொதுமக்களின் அச்சத்தை போக்க ரயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து நாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.