districts

கடலை எண்ணெய், துவரம் பருப்பு, பாசிப் பருப்பு விலை உயர்வு

விருதுநகர், மே 28- விருதுநகர் சந்தையில் கடலை எண்ணெய், துவரை மற்றும் பாசிப் பருப்பின் விலை உயர்ந்துள்ளது. இத னால் பொது மக்கள் பெரும் அதிர்ச்சி யடைந்துள்ளனர்.கடந்த வாரம் 15 கிலோ கடலை  எண்ணெய் டின் ஒன்று ரூ.3 ஆயி ரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் டின் ஒன்றுக்கு ரூ.100 வரை உயர்வு ஏற்பட்டு தற்போது ரூ.3100-க்கு விற்கப்படுகிறது. 100 கிலோ துவரம் பருப்பு புதுஸ்  நாடு வகையானது ரூ.11,200க்கு கடந்த வாரம் விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.300 உயர்ந்து தற்போது ரூ.11500க்கு விற்பனையாகிறது. பாசிப்பருப்பு  கடந்த வாரம் 100  கிலோ ரூ.10,300-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த  வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.200 உயர்ந்து தற்போது ரூ.10,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.