சென்னை,ஜன.7- மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உதவி ரூ.1,500 லிருந்து 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்தும், உறுப்பி னர்களின் விவாதங்களுக்கு பதில் அளித்தும் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,“ மாற்றுத் திறனாளிகள் என்று பெயர் சூட்டியவர் கலைஞர். அவரது வழியிலே நடந்து வரும் இந்த அரசு, மாற்றுத் திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, கடுமையான இயலாமை; கடுமையான அறிவுசார் குறை பாடு; தசைச்சிதைவுகள் மற்றும் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்க ளுக்கான பராமரிப்புத் தொகையாக ரூ.1,500 வழங்கப்பட்டு வருகிறது. இனி அந்த உதவித் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். இதன்மூலம் 2,06,254 பேர் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு ஆண்டொன்றிற்கு 123 கோடியே 75 லட்சம் ரூபாய் கூடுதல் செலவாகும்” என்றார்.
போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி
முதலமைச்சரின் இந்த அறிவிப்பை வரவேற்றிருக்கும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன், தலைவர் பா. ஜான்சிராணி ஆகியோர் கூறுகை யில்,“ எமது சங்கத்தின் தொடர் போராட்டங்க ளுக்கு கிடைத்த வெற்றி இது” என்றார். வருவாய்த் துறை மூலம் சமூகப் பாது காப்பு உதவியாக ரூ.1000 பெற்ற சுமார் 3 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு முதல மைச்சரின் இந்த அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. தெலங்கானா, ஆந்திரா போன்று 40 விழுக்காடு ஊனமுற்ற அனைவருக்கும் ரூ. 3000 உயர்த்தி வழங்க வேண்டும் என்பதே கோரிக்கையாகும் என்றும் தெரிவித்தனர்.