சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட விளையாட்டு வளாகங்கள், ஒலிம்பிக் அகாடமிகள், பாரா விளையாட்டு அரங்கங்கள் கட்டுவதற்கு ரூ.127.90 கோடி மதிப்பீட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் ரூ. 4.93 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய உள்விளையாட்டரங்கத்தை திறந்து வைத்தும், சர்வதேச, ஆசிய மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 1,021 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ. 26.69 கோடி உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.