districts

img

மினி கிளினிக்குகளை திறக்க வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 5 - பெருநகர சென்னை மாநகராட்சி 164, 166ஆவது வட்டங்களில் கட்டி முடிக்கப்பட்ட மினி கிளினிக்குகளை திறக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி  கள்ளச் சாராய சாவுகளை தடுக்க தவறியதை கண்டித்தும், மாநகராட்சி 12ஆவது மண்டல மக்களின் கோரிக் கைகளை வலியுறுத்தியும்  வியா ழனன்று (ஜூலை 4) நங்கநல்லூரில் கூட்டம் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய தலைவர்கள், 166ஆவது வட்டம் கே.கே.நகர் பிரதான சாலையில் சுற்றுக்காவல் நிலையம் (போலீஸ் பூத்) அமைக்க வேண்டும், 167ஆவது வட்டம் ஸ்டேட் பேங்க் காலனி யில் பேருந்து நிழற்குடை அமைக்கவேண்டும், மூவரசம்பட்டு ஏரிக்கரை யில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தினர். கட்சியின் ஆலந்தூர் பகுதிச் செயலாளர் என்.வெங்கடேசன் தலைமை யில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் ச.லெனின், பகுதி குழு உறுப்பினர் மோகன்ஜி, கிளைச்செயலாளர் பாரதி உள்ளிட்டோர் பேசினர்.