districts

img

ராணிப்பேட்டையில் பல தடைகளை தகர்த்து சுமைப்பணி தொழிலாளர் சங்கம் துவக்கம்

ராணிப்பேட்டை, டிச. 26 – சிஐடியு தலைமையிலான சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கம் அமைக்க திமுக, அதிமுக உள்ளிட்ட               5 சங்கத்தினர் இணைத்து எதிர்ப்பு தெரி வித்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், சிப்காட் பேருந்து நிலையம் அருகில் புதனன்று (டிச. 25) வாலாஜா தாலுகா பொது தொழிலாளர் சங்கம் இணைப்பில் உள்ள ராணிப்பேட்டை மாவட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கம் துவக்க விழா நடைபெற இருந்தது.  இந்நிலையில் திமுக, அதிமுக உள்ளிட்ட 5 சங்கத்தினர் இணைத்து சிஐடியு சங்கம் அமைக்க எதிர்ப்பு தெரி வித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் சிப்காட் காவல்துறை ஆய்வாளர் சசிகுமார் முன்னிலையில் சிஐ டியு சங்க நிர்வாகிகள் மற்றும் திமுக, அதிமுக உள்ளிட்ட சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் வாலாஜா தாலுகா பொது தொழிலாளர் சங்கம் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்து சிஐடியு சங்க நிர்வாகிகள் பேசினார்.  பேச்சுவார்த்தையில் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணிசெய்ய வேண்டும் என அறிவுறுத்தி அவரவர் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் சங்கம் அமைக்க தடை இல்லை என காவல் ஆய்வாளர் சசிகுமார் அறி வுறுத்தினார். தொடர்ந்து திட்டமிட்ட படி சங்கப் பெயர் பலகையை சிஐடியு மாவட்ட பொருளாளர் என். ரமேஷ் திறந்து வைத்தார். சிபிஎம் மாவட்ட செயலாளர் பி. ரகுபதி சங்க கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.  இதில் சிஐடியு மாவட்ட செயலாளர் ஆ.தவராஜ், விவசாய சங்க மாவட்ட செய லாளர் எல்.சி. மணி, வாலாஜா தாலுகா பொது தொழிலாளர் சங்கம் பொறுப்பாளர் ஹரி. கார்த்திக், மாவட்ட பொருளாளர் கே.குழந்தைவேலு, ரவி, வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் ஆ. கலைவாணன், நிர்வாகிகள் செந்தில் குமார், ஷாம் பிரதீஸ், பத்மஞான ஸ்கந்தன், செந்தில், சுமைப்பணி சங்க கிளைத் தலைவர் எஸ். மதன்குமார், பொருளாளர் பி. தயாநிதி உள்ளிட்ட சுமைப்பணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.