ராயபுரம் மேற்குப் பகுதி 48ஆவது வார்டுக்குட்பட்ட பார்த்தசாரதி நகர் குடியிருப்பு பகுதியில் வடசென்னை மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பன்நோக்கு கட்டிடத்தை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு செவ்வாயன்று (செப். 10) திறந்து வைத்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி.சேகர், ஐட்ரீம் இரா.மூர்த்தி, வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, மண்டலக்குழு தலைவர் நேதாஜி கணேசன், மாமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.