districts

img

லெஹ்ரி வால்வு தொழிற்சாலை கும்மிடிப்பூண்டியில் துவக்கம்

 சென்னை, அக் 9: லெஹ்ரி இன்ஸ்ட்ருமென்டக்ஷன் வால்வு  நிறுவனம்,  சென்னைக்கு அருகிலுள்ள கும்முடிப்பூண்டி தொழிற் பேட்டையில் வால்வுகள் உற்பத்தி தொழில்சாலையை நிறுவி உள்ளது.   நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அப்பாஸ் லொஹ்ரி முன்னிலையில்  தொழிலதிபர் என்.கே. ரங்கநாத் நிறுவன தொழில்சாலையை திறந்து வைத்தார். லொஹ்ரி நிறுவனம் ரூ 30 கோடியை முதலீடு செய்துள்ளது. லெஹ்ரி வால்வுஸ்   என்பது தொழில்துறை, குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்களுக்கான குடிநீர் மற்றும் கழிவு நீர் குழாய்கள், தீ பாதுகாப்பு சாதனம், சோலார் பயன்பாடு ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் வால்வு களை தயாரிக்கும் முன்னணி நிறுவனமாகும். கடந்த 70 ஆண்டுகளாக இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.   புவி வெப்பமடைவதைக் குறைக்கும் வகையில் சுற்றுச்சூழக்கு உகந்த முறையில் ஆலையில் உற்பத்தி நட வடிக்கைகள் இருக்கும் என்று நிர்வாக இயக்குனர் அப்பாஸ் லொஹ்ரி  கூறினார்.