வேலூர், செப்.2 - வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம் மகி மண்டலம் கிராமத்தில் தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் புதிய கிளை துவக்க விழா நடைபெற்றது. இதனையொட்டி தகவல் பலகை திறப்பு மற்றும் செங்கொடியேற்றும் நிகழ்வு மகிமண்டலம் கிராமத்தில் மாவட்ட தலைவர் பி.நதியா தலைமையில் நடை பெற்றது. மகிமண்டலம் கிளை தலைவர் கே.சந்தனவேல், கௌரவ தலைவர் கே.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கிளைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார். மாநில துணைச் செயலாளர் எம்.மாரிமுத்து சங்க தகவல் பலகை திறந்து வைத்து துவக்கவுரையாற்றினார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் மற்றும் பழங்குடியின ஆன்றோர் மன்ற குழு உறுப்பினர் ரா.சரவணன் செங்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். சங்கத்தின் மாவட்ட செயலாளர் சி.எஸ். மகாலிங்கம், தவிச மாவட்ட செயலாளர் கே.சாமிநாதன்,விதொச மாவட்ட செயலாளர் செ.ஏகலைவன் வாழ்த்திப் பேசினர். இதில் கிளை நிர்வாகிகள் ஆர்.ராசாத்தி, ஆர்.ராஜேஷ், கே.செம்பருத்தி உள்ளிட்ட ஏராளமான பழங்குடி மக்கள் பங்கேற்றனர்.