தருமபுரி, மே 10- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கல் வெட்டு திறப்பு விழாவில் ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கல் வெட்டு திறப்பு மற்றும் சங்க கொடியேற்று விழா நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, சங்கத்தின் வட்ட தலைவர் யாரப் பாட்ஷா தலைமையில் நடைபெற்றது. வட்ட செயலாளர் முருகன் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் கோ.பழனியம்மாள் கல் வெட்டை திறந்து வைத்தார். அகில இந்திய அரசு ஊழியர் சம்மேளன கொடியை மாவட்ட செயலாளர் ஏ.சேகர் ஏற்றி வைத் தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கொடியை மாவட்ட தலைவர் எம்.சுருளிநாதன் ஏற்றி வைத்தார். இதில், மாவட்ட துணைத்தலைவர்கள் பா.சங்கர், தீ.சண்முகம், சி.காவேரி, மாவட்ட துணைச்செயலாளர் குணசேகரன், பொது நூலகத்துறை அலுவலர்கள் சங்க மாநிலத் தலைவர் பெ.பிரபாகரன், சத்துணவு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் பெ.மகேஸ்வரி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட துணைத்தலைவர் வேலுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில், அரசு ஊழியர் சங்க வட்ட பொரு ளாளர் வசந்தகுமார் நன்றி கூறினார்.