விழுப்புரம், ஜன.31- விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே எய்யில் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சால் புயல் பாதிப்புக்கு பின்னர் தற்போது நெல் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதற்கு அரசு சார்பில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மேல்மலையனூர் அருகே எய்யில் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலைய திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், சிபிஎம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு நேரடி கொள்முதல் முதல் நிலையத்தை திறந்து வைத்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி ராஜா உட்பட பலர் உடனிருந்தனர்.