districts

img

கடலூர் உழவர் சந்தை சாலையோர வியாபாரிகள் சங்கம் துவக்கம்

கடலூர், ஜன.1 – கடலூர் திருப்பாதிரிபுலி யூர் உழவர் சந்தையில் உழவர் சந்தை சாலை யோர வியாபாரிகள் சங்கம் சிஐடியு துவக்க விழா நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எஸ். சங்கமேஸ்வரன் தலைமை தாங்கினார். சங்கத்தின் பெயர் பலகையை சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.பழனிவேல் திறந்து வைத்தார். சாலையோர சிறு கடை வியாபாரி சங்கத்தின் மாநில அமைப்பாளர் பி.கருப்பையன், சிஐ டியு மாவட்டத் துணைத் தலைவர் வி.சுப்புராயன், மாவட்ட இணைச்  செயலாளர்கள் வி.திரு முருகன், வி.கிருஷ்ண மூர்த்தி, எ.பாபு, கே.ஸ்டாலின் உள்ளிட்டோர் பேசினர். உழவர் சந்தை சங்கத்தின் தலைவர் பாலையா என்கின்ற பெருமாள், செயலாளர்  ஏ. முரளி, பொருளாளர் ஆர்.ராதா கிருஷ்ணன், துணைத் தலைவர்கள் ஆர்.பாட்ஷா, ஜெயச்சந்திரன், ஆர்.சுந்தரி, இணை செய லாளர் ஆர்.ஜோதி, எ. சௌந்தர்ராஜன், எஸ்.கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருப்பாதிரிப்புலியூரில் உழவர் சந்தையின் பின்புறம்  சாலையோர வியாபாரிகளுக்கு மாநக ராட்சி சார்பில் (ஷெட்) இரும்பு கூரை  அமைத்து தர வேண்டும்.  மின்விளக்கு அமைத்து தர வேண்டும்,  வியாபாரிகள் அனைவருக்கும் மாநக ராட்சி அடையாள அட்டை வழங்க வேண்டும், உழவர் சந்தையை சுற்றி வியா பாரம் செய்யும் சாலையோர வியாபாரிகளுக்கு மழை, வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.