வேலூர், ஆக. 30 - வேலூர் மாவட்டம், காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் உழவர் களஞ்சியம் வேளாண்மை பொருட்கள் விற்பனை கண்காட்சி விஐடி பல்கலைக்கழக துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் தலைமை யில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்பு லெட்சுமி, கவுரவ விருந்தினராக திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் ஆறுமுகம், காஞ்சனா பாஸ்கரன், இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த உழவர் களஞ்சியத்தில் வேலூர்,திருப்பத்தூர்,ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 5 ஆயிரம் விவசாயிகள் கலந்து கொள்கின்ற னர். 130 அரங்குகள் அமைக்கப்பட் டுள்ளன. அரசு விவசாய தொழில் நுட்பம், சுய உதவி குழுக்கள் மீன் வளர்ப்பு, காளான் வளர்ப்பு, இயற்கை உரம் தயாரிப்பு, தென்னை விவசாயம் பூச்செடிகள், உழவு மதிப்பு கூட்டப்பட்ட பொருட் கள், பாரம்பரிய அரிசிவகைகள், விதைகள், உழவு இயந்திரங்கள் வேளாண் கருவிகள் உள்ளிட்டவை கள் கண்காட்சியில் இடம்பெற்றது. கண்காட்சியை துவங்கி வைத்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி பேசுகையில், நாட்டின் உணவு உற்பத்தி அடுத்த ஆண்டு 350 மெட்ரிக் டன் தேவைப்படுகிறது. வேளாண்மையில் பல நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்தி உற்பத்தியை பெருக்க முன் வரவேண்டும். குறிப்பாக அரசு விவசாயத்திற்கு பல சலுகைகளை அளிக்கிறது. மாதந்தோறும் மாவட்ட ஆட்சி யர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெறுகிறது. விவசாயிகளாகிய நீங்கள் இந்த கூட்டத்தில் அவசியம் கலந்து கொண்டு அரசு வழங்கும் சலுகை களை தெரிந்துகொண்டு வங்கி கடனை பெற்று விவசாயத்தை மேம்படுத்த வேண்டும். வேளாண் மைத்துறை, தோட்டக்கலைத்துறை அதிகாரிகளும் உங்களுக்கு பல வழிகாட்டுதல்களை வழங்க தயாராக உள்ளனர் இதனை பயன்படுத்திகொள்ள வேண்டும் என்றார். இவ்விழாவில் வேளாண்மை துறை கால்நடைத்துறை, மீன் வளர்ப்பு துறைகளில் சிறப்பாக செயலாற்றிய அதிகாரிகளுக்கு கேடயங்களும், பாராட்டு சான்றிதழ் களும் வழங்கப்பட்டது.