districts

img

மாற்றுத்திறனாளிகள் காத்திருக்கும் போராட்டம் வெற்றி

விழுப்புரம், ஆக.27- விழுப்புரம் மாவட்டத்தில், 100 நாள் வேலை வழங்கக் கோரி விக்கிர வாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் சார்பில் காத்தி ருக்கும் போராட்டம் நடைபெற்றது. விக்கிரவாண்டி ஒன்றியத்திற்குட்பட்ட முண்டியம்பாக்கம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளி கள் நூறு நாள் வேலை கேட்டு விண்ணப்பம் கொடுத்தும் வேலை வழங்காமல், அலட்சியப் படுத்தி வரு கின்றனர். அதேபோன்று வி.சாத்தனூரில் வேலை இருக்கிறது. ஆனால் கூலி கொடுக்க பணம் இல்லை என்று கூறி மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை கொடுக்காமல் இழுத்தடிப்பு செய்துள்ள னர். இதுகுறித்து பலமுறை புகார் தெரி வித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், வேலை கொடுக்கும் வரைக்கும் காத்திருப்போம் என்று போராட்டத்தை துவக்கினார். இதையடுத்து, அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக முண்டியம் பாக்கம், வி.சாத்தனூர், சிந்தாமணி, பொன்னங்குப்பம் உள்ளிட்ட ஊராட்சி மன்றத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்குவதாக உறுதியளித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.  இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.  பி.உமா, ஜி.கோவிந்த ராஜ், விஜயகுமார், கமலாம்பாள், வேல்முருகன், நாகலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.