districts

பயிற்சியின் போது நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

 காஞ்சிபுரம்,ஜூன் 8-

    திருப்பெரும்புதூர் அருகே உள்ள நீலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மனைவி தாரிகா. இவர்களது மகன்கள் சஸ்வின் வைபவ் (வயது 6), சித்திக் வைபவ். சஸ்வின் வைபவ் தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். கோடை விடுமுறையை முன்னிட்டு அதே பகுதி சுந்தரம் நகரில் உள்ள நீச்சல் குளத்தில் சஸ்வின் நீச்சல் பயிற்சிக்கு சென்று வந்தார். சிறுவன் சஸ்வின்  நீச்சல் பழகிக்கொண்டு இருந்த போது  தாரிகா தனது மற்றொரு மகன் சித்விக்கு உணவு கொடுக்க  நீச்சல் குளத்தில் இருந்து சிறிது தூரத்துக்கு அழைத்து சென்றார். அப்போது நீச்சல் குளத்தில் இருந்த சிறுவன் சஸ்வின் தண்ணீரில் மூழ்கினார். இதனை அருகில் இருந்த வர்கள் யாரும் கவனிக்க வில்லை. சிறிது நேரத்தில் சஸ்வின் வைபவ் பரிதாபமாக இறந்தார்.