districts

மக்கள் நீதிமன்றத்தில் 124 வழக்குகளுக்கு தீர்வு

கடலூர்,ஆக.12-

    வருவாய் துறை சார்ந்த வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம், கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின், தலைவர் ஜவஹர் தலைமையில் நடை பெற்றது.

     மோட்டார் வாகன விபத்து வழக்குகள் இரண்டாவது சிறப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி பிரகாஷ், இரண்டாவது கூடுதல் சார்பு நீதிபதி, அன்வர் சதக் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1, வனஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.  இதில் கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வின் செயலாளரும் தலைமை குற்றவியல் துறை நடு வருமான  பிரபாகர், கடலூர் மாவட்ட நீதிமன்றத்தின் பார் அசோசியேஷன் தலைவர் பால கிருஷ்ணன், லாயர்ஸ் அசோசியேஷன் தலைவர் வனராசு, செயலாளர்  சிவ சிதம்பரம் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர் இதில் வருவாய் துறை சார்ந்த வழக்குகள், நில எடுப்பு வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள் சிவில் வழக்குகள் விசாரணைக்கு மற்றும் எடுத்துக்கொள்ளப்பட்டது.

     மாவட்டம் முழுவதும் 06 அமர்வுகள் மூலம் சுமார் 294 வழக்குகள் விசார ணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 124 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ. 4,84,95,125  தொகைக்கு உத்தரவிடப்பட்டது.